பதிவு செய்த நாள்
07 ஜூலை2018
01:11
சென்னை:‘‘ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்குப்பின், தமிழகம், 50 ஆயிரத்து, 972 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியுள்ளது,’’ என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான, ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரி விதிப்பு முதன்மை ஆணையர், சி.பி.ராவ் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு முன், தமிழகத்தில், சேவை மற்றும் கலால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 97 ஆயிரமாகவும், ‘வாட்’ என்ற மதிப்பு கூட்டு வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 5.10 லட்சமாக இருந்தது.ஜி.எஸ்.டி., நடைமுறைக்குப்பின், புதிதாக, 3.72 லட்சம் பேர் வரி செலுத்த பதிவு செய்துள்ளனர். இவற்றுடன், ஜி.எஸ்.டி.,க்குப்பின், மொத்தமாக வரி செலுத்தவோரின் எண்ணிக்கை, 9.80 லட்சமாக உள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்த, 2017 ஜூலை, 1 முதல், 2018 மார்ச் வரை, மத்திய ஜி.எஸ்.டி., வருவாய், 24 ஆயிரத்து, 745 கோடி ரூபாய்; மாநில ஜி.எஸ்.டி., வருவாய், 26 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் என, மொத்தம் 50 ஆயிரத்து, 972 கோடி ரூபாய் வரி கிடைத்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுக்கான, ஜி.எஸ்.டி., வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.ஏற்றுமதி வணிகர்களுக்கு செலுத்திய வரியை திரும்ப செலுத்த முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வழியாக, 5,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2,620 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது; 300 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஜி.எஸ்.டி., வணிகர்கள் பதிவு மற்றும் வருவாயில், இந்திய அளவில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.ஜி.எஸ்.டி., வரி குறைப்புக்கு எதிராக, அதிக லாபம் ஈட்டும் பல்வேறு நிறுவனங்கள் மீது, புகார்கள் பெறப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை, கொள்ளை லாப தடுப்பு குழுவுக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|