மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ... ‘ரீபண்டு’ வழங்க இழுத்தடிக்கும்மாநில வணிக வரி அதிகாரிகள் ‘ரீபண்டு’ வழங்க இழுத்தடிக்கும்மாநில வணிக வரி அதிகாரிகள் ...
‘தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.50,972 கோடி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
01:11

சென்னை:‘‘ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்குப்பின், தமிழகம், 50 ஆயிரத்து, 972 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியுள்ளது,’’ என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான, ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரி விதிப்பு முதன்மை ஆணையர், சி.பி.ராவ் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு முன், தமிழகத்தில், சேவை மற்றும் கலால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 97 ஆயிரமாகவும், ‘வாட்’ என்ற மதிப்பு கூட்டு வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 5.10 லட்சமாக இருந்தது.ஜி.எஸ்.டி., நடைமுறைக்குப்பின், புதிதாக, 3.72 லட்சம் பேர் வரி செலுத்த பதிவு செய்துள்ளனர். இவற்றுடன், ஜி.எஸ்.டி.,க்குப்பின், மொத்தமாக வரி செலுத்தவோரின் எண்ணிக்கை, 9.80 லட்சமாக உள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்த, 2017 ஜூலை, 1 முதல், 2018 மார்ச் வரை, மத்திய ஜி.எஸ்.டி., வருவாய், 24 ஆயிரத்து, 745 கோடி ரூபாய்; மாநில ஜி.எஸ்.டி., வருவாய், 26 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் என, மொத்தம் 50 ஆயிரத்து, 972 கோடி ரூபாய் வரி கிடைத்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுக்கான, ஜி.எஸ்.டி., வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.ஏற்றுமதி வணிகர்களுக்கு செலுத்திய வரியை திரும்ப செலுத்த முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வழியாக, 5,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2,620 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது; 300 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஜி.எஸ்.டி., வணிகர்கள் பதிவு மற்றும் வருவாயில், இந்திய அளவில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.ஜி.எஸ்.டி., வரி குறைப்புக்கு எதிராக, அதிக லாபம் ஈட்டும் பல்வேறு நிறுவனங்கள் மீது, புகார்கள் பெறப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை, கொள்ளை லாப தடுப்பு குழுவுக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)