பதிவு செய்த நாள்
07 ஜூலை2018
01:13
புதுடில்லி:மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை, கடந்த அரையாண்டில், இந்தியாவில், 12.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு காலத்தில், 8,061 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ரோலண்டு போல்கர் கூறியதாவது:கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 7,171 கார்கள் விற்பனை ஆகின. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 8,601 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
புதிய தலைமுறை செடான் கார்கள், எஸ்.யு.வி., கார்கள் போன்றவற்றால் இந்த விற்பனை சாத்தியமாகியுள்ளது. எஸ்.யு.வி., கார்களை பொறுத்தவரையில், இந்த அரையாண்டில், 15.9 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், போட்டி நிறுவனத்தின் தயாரிப்புகளான, பி.எம்.டபுள்யு., மற்றும் மினி கார்கள் விற்பனை, 5,171 என்ற எண்ணிக்கையை தொட்டு, 13 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|