‘தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.50,972 கோடி’‘தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.50,972 கோடி’ ... கோவை, ‘கொடீசியா’ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு கோவை, ‘கொடீசியா’ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு ...
‘ரீபண்டு’ வழங்க இழுத்தடிக்கும்மாநில வணிக வரி அதிகாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
01:18

திருப்பூர்:முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தாலும், மாநில வணிக வரி அதிகாரிகள், ‘ரீபண்டு’ வழங்க இழுத்தடிப்பதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருப்பூரில், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில், சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி., மற்றும் ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்துகின்றன. ஏற்றுமதி நிறுவனங்கள், செலுத்தும் வரியினங்கள், ‘ரீபண்டு’ ஆக திரும்ப வழங்கப்படுகிறது.
திருப்பூரை பொறுத்தவரை, மத்திய, ஜி.எஸ்.டி., வரித்துறைக்கு, ஒற்றை எண்ணிக்கையிலான அதிகாரிகளே உள்ளனர்.துணை கமிஷனர் தலைமையில், ஒன்பது சரக அலுவலகங்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் வரி அதிகாரிகளுடன் வணிக வரித்துறை இயங்குகிறது.இருப்பினும், அதிகபட்சம், 10 நாட்களில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, ஏற்றுமதியாளர்களுக்கு, ‘ரீபண்டு’ வழங்கி விடுகின்றனர்.
அதே நேரம், வணிக வரித்துறையிடமிருந்து, எஸ்.ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெறுவது, ஏற்றுமதி யாளர்களுக்கு தலைவலியாக உள்ளது.தங்களிடம் பதிவு செய்த ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமின்றி, மத்திய வரித்துறை அதிகாரிகள் முழு தணிக்கை செய்து, அனுப்பும் விண்ணப்பங்கள் மீதான, ‘ரீபண்டு’ வழங்குவதற்கும் கூட, வணிக வரி அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆடை ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:மத்திய, ஜி.எஸ்.டி., துறை தணிக்கை செய்த ஆவணங்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல், மாநில வணிக வரித்துறையினர், ‘ரீபண்டு’ வழங்கவேண்டும். ஆனால், திருப்பூரிலுள்ள அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். அதிக எண்ணிக்கையில், அதிகாரிகள் இருந்தாலும்கூட, வணிக வரித்துறையிடமிருந்து, எஸ்.ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெற, 20 நாட்களுக்கு மேலாகி விடுகிறது.

ஆவணங்கள் முறையாக இருக்கும்பட்சத்தில், காலதாமதம் இன்றி, ஏற்றுமதியாளர்களுக்கு ‘ரீபண்டு’ கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)