பதிவு செய்த நாள்
07 ஜூலை2018
01:18
திருப்பூர்:முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தாலும், மாநில வணிக வரி அதிகாரிகள், ‘ரீபண்டு’ வழங்க இழுத்தடிப்பதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருப்பூரில், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில், சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி., மற்றும் ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்துகின்றன. ஏற்றுமதி நிறுவனங்கள், செலுத்தும் வரியினங்கள், ‘ரீபண்டு’ ஆக திரும்ப வழங்கப்படுகிறது.
திருப்பூரை பொறுத்தவரை, மத்திய, ஜி.எஸ்.டி., வரித்துறைக்கு, ஒற்றை எண்ணிக்கையிலான அதிகாரிகளே உள்ளனர்.துணை கமிஷனர் தலைமையில், ஒன்பது சரக அலுவலகங்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் வரி அதிகாரிகளுடன் வணிக வரித்துறை இயங்குகிறது.இருப்பினும், அதிகபட்சம், 10 நாட்களில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, ஏற்றுமதியாளர்களுக்கு, ‘ரீபண்டு’ வழங்கி விடுகின்றனர்.
அதே நேரம், வணிக வரித்துறையிடமிருந்து, எஸ்.ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெறுவது, ஏற்றுமதி யாளர்களுக்கு தலைவலியாக உள்ளது.தங்களிடம் பதிவு செய்த ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமின்றி, மத்திய வரித்துறை அதிகாரிகள் முழு தணிக்கை செய்து, அனுப்பும் விண்ணப்பங்கள் மீதான, ‘ரீபண்டு’ வழங்குவதற்கும் கூட, வணிக வரி அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆடை ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:மத்திய, ஜி.எஸ்.டி., துறை தணிக்கை செய்த ஆவணங்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல், மாநில வணிக வரித்துறையினர், ‘ரீபண்டு’ வழங்கவேண்டும். ஆனால், திருப்பூரிலுள்ள அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். அதிக எண்ணிக்கையில், அதிகாரிகள் இருந்தாலும்கூட, வணிக வரித்துறையிடமிருந்து, எஸ்.ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பெற, 20 நாட்களுக்கு மேலாகி விடுகிறது.
ஆவணங்கள் முறையாக இருக்கும்பட்சத்தில், காலதாமதம் இன்றி, ஏற்றுமதியாளர்களுக்கு ‘ரீபண்டு’ கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|