பதிவு செய்த நாள்
07 ஜூலை2018
01:54
ஜூலை:கோயம்புத்துார் மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு – ‘கொடீசியா’வின் தலைவராக, ஆர். ராமமூர்த்தி, செயலராக, பி.எஸ்.தேவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து, கொடீசியா வெளியிட்டுள்ள அறிக்கை:
கொடீசியாவின், 49வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்டோருடன் பல்வேறு பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள், நில வகைப்பாடு உட்பட, அனைத்து உரிமங்களும், ஒற்றைச் சாளர முறையில் கிடைத்திட, மத்திய அரசு ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்கள், ராணுவம், ரயில்வே ஆகிய துறைகள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களிடம், 20 சதவீத பொருட்களை கட்டாயமாக கொள்முதல் செய்வதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்.நாடு தழுவிய அளவில், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்கள் கிடைக்கும் வகையில், திறன் வளர்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்.
உள்நாடு மற்றும் சர்வதேச கண்காட்சிகளில், பொருட்களை சந்தைப்படுத்த உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|