பதிவு செய்த நாள்
07 ஜூலை2018
01:56
புதுடில்லி:பஞ்சாப் நேஷனல் வங்கி, மூன்று நிறுவனங்களிடம் இருந்து வசூலாகாமல் உள்ள, 136 கோடி ரூபாய் வாராக் கடனை, விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:மூன்று நிறுவனங்களின், 136 கோடி ரூபாய் வாராக் கடன்களை வலைதள ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவற்றில், குவாலியர் ஜான்சி எக்ஸ்பிரஸ்வேஸ் நிறுவனத்திடம் இருந்து, 55 கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்க வேண்டியுள்ளது.
எஸ்.வி.எஸ்., பில்ட்கான் மற்றும் சிவா டெக்ஸ்பேப்ஸ் நிறுவனங்கள், முறையே, 50 கோடி ரூபாய் மற்றும், 31.06 கோடி ரூபாய் வாராக் கடன்களை நிலுவையில் வைத்துள்ளன.வாராக் கடன் விற்பனைக்கான மின்னணு ஏலம், இன்று நடைபெறும். இதில், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
வங்கியின் வலைதளத்தில் ஏலம் தொடர்பான அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, 2017 டிசம்பர் நிலவரப்படி, வங்கித் துறையின் வாராக் கடன், 8.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|