பதிவு செய்த நாள்
08 ஜூலை2018
00:13
கோல்கட்டா;இந்தியா, ஏற்றுமதி பொருட்களுக்கு அதிக மானியம் வழங்குவதாக, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு மறுத்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காகவே, சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதை, சில நாடுகள் மானியம் வழங்குவதாக கூறுகின்றன. குறிப்பாக, விவசாய பொருட்கள் ஏற்றுமதியை அவை சுட்டிக் காட்டுகின்றன.
நாம் ஏற்றுமதிக்கு மானியம் வழங்குவதாக, இதர நாடுகள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு, உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளின்படியே, சலுகைகள் வழங்கப்படுகின்றன.‘ஒபெக்’ எனப்படும், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளில், விவசாயிகளுக்கு அதிக மானியங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு மானியம் மிக அதிகமாக அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய, சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை. அத்துடன், வரி விலக்கு அளிக்கும் நாடுகளில், மிக உயர்ந்த, பாதுகாப்பு தரத்துடன் பொருட்களை ஏற்றுமதி செய்வது அவசியம்.விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு உயர்த்த, மத்திய அரசு ஏற்கனவே கொள்கை திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|