ஏற்றுமதி மானியம் மத்திய அரசு விளக்கம் ஏற்றுமதி மானியம் மத்திய அரசு விளக்கம் ... இந்­திய சுற்­றுலா பய­ணி­யர் மன­நி­லை­யில் மாற்­றம் இந்­திய சுற்­றுலா பய­ணி­யர் மன­நி­லை­யில் மாற்­றம் ...
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு பதவி நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2018
00:15

புதுடில்லி;ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர், முகேஷ் அம்­பா­னி­யின்பத­விக் காலம், மேலும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மும்­பை­யில், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின், 41வது, ஆண்டு பொதுக் குழு கூட்­டம், இரு தினங்­க­ளுக்கு முன் நடை­பெற்­றது. இதில், ரிலை­யன்ஸ் பங்கு முத­லீட்­டா­ளர்­கள் ஏரா­ள­மா­னோர் பங்கேற்றனர்.இக்­கூட்­டத்­தில், முகேஷ் அம்­பானி, ‘ஜியோ­கிகா பைபர்’ கம்­பி­வட அகண்ட அலை­வ­ரிசை சேவை, ‘ஜியோ­போன் 2’ வெளி­யீடு உள்­ளிட்ட அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார்.

இதை­ய­டுத்து, நிறு­வ­னத்­தின் செயல் திட்­டங்­கள் தொடர்­பான தீர்­மா­னங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, பங்­கு­தா­ரர்­கள் ஒப்­பு­த­லு­டன் நிறை­வேற்­றப்­பட்­டன. அவற்­றில், முகேஷ் அம்­பா­னி­யின் பத­விக் காலத்தை, மேலும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்க செய்­யும் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக, 98.5 சத­வீ­த­மும், எதி­ராக, 1.48 சத­வீத ஓட்டுகளும் விழுந்­தன.

இதன்­படி, 2019, ஏப்.,19 முதல், முகேஷ் மேலும் ஐந்து ஆண்­டு­கள், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­ன­ராக பொறுப்பு வகிப்­பார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இதன்படி, 66 வயது வரை அவர் இப்பதிவியில் நீடிப்பார்.

ஊதி­யம்

முகேஷ் அம்­பா­னிக்கு ஆண்டு ஊதி­ய­மாக, 4.17 கோடி ரூபாய் வழங்­கப்­படும் என, தீர்­மா­னத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அத்­து­டன், 59 லட்­சம் ரூபாய்க்கு, அல­வன்ஸ் மற்­றும் இதர சலு­கை­கள் பெற­லாம். இதில், ஓய்­வூ­திய பலன்­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை.இத்­து­டன், நிறு­வ­னத்­தின் நிகர லாப அடிப்­ப­டை­யி­லான, ‘போனஸ்’ தொகை­யும், முகேஷ் அம்­பா­னிக்கு கிடைக்­கும்.

மேலும், பணி தொடர்­பான பய­ணத்­தில், மனைவி, உத­வி­யா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ருக்­கான செல­வு­கள்; வாகன செலவு மற்­றும் இல்­லத்­தில் தொலை­தொ­டர்பு சேவை­க­ளுக்கு செய்த செல­வு­களை, திரும்­பப் பெற்­றுக் கொள்­ள­லாம்.முகேஷ் அம்­பானி மற்­றும்அவர் குடும்­பத்­தி­ன­ருக்­கான நிறு­வ­னத்­தின் பாது­காப்பு செல­வி­னம், சலு­கை­யாக கரு­தப்­ப­டாது.இக்­கூட்­டத்­தில், பங்­கு­க­ளாக மாறாத கடன் பத்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்­றின் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டும் தீர்­மா­னத்­திற்­கும்ஒப்­பு­தல் அளிக்­கப்பட்­டது. ஆனால், இத்­தொகை எதற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் என்­பது தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

கடந்து வந்த பாதை

பெட்­ரோ­லிய பொருட்­கள் உற்­பத்தி, எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு உள்­ளிட்ட தொழில்­களில், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், ஈடு­பட்­டுள்­ளது.இந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­னர் குழு­வில், 1977ல், முகேஷ் அம்­பானி இணைந்­தார்.இவர் தந்தை, திரு­பாய் அம்­பானி, 2002, ஜூலை, 6ல் மறைந்­ததை தொடர்ந்து, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­ன­ராக, முகேஷ் அம்­பானி பொறுப்­பேற்­றார்.

சகோ­த­ரர் அனில் அம்­பானி, துணை தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.இந்­நி­லை­யில், 2005ல், கருத்து வேறு­பாடு கார­ண­மாக, சகோ­த­ரர்­கள் வர்த்­த­கத்தை பிரித்­துக் கொண்டு, தனித் தனி­யாக இயங்­கத் துவங்­கி­னர். இதை­ய­டுத்து, பிர­தான நிறு­வ­ன­மான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீ­சின் முழு கட்­டுப்­பா­டும், முகேஷ் அம்­பானி கைக்கு வந்­தது.தொலை­த்தொ­டர்பு, நிதி, காப்­பீடு, பொழு­து­போக்கு உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்த துணை நிறு­வ­னங்­கள், அனில் அம்­பா­னிக்கு கிடைத்­தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)