பதிவு செய்த நாள்
09 ஜூலை2018
00:22
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இக்கால தலைமுறையினரில் பெரும்பாலானோர், உணவை அடிப்படையாக கொண்டு சுற்றுலா இடங்களை தேர்வு செய்வதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஹோட்டல்ஸ்.காம் ஆய்வு தெரிவிப்பதாவது:இந்திய இளம் தலைமுறையினரில், 67 சதவீதத்தினர் தாங்கள் சுவைக்க விரும்பும் உணவின் அடிப்படையில் சுற்றுலா செல்லும் இடத்தை தேர்வு செய்கின்றனர். இரவு வாழ்க்கை, சாகச நிகழ்வுகள், கலாசார அம்சங்கள் ஆகியவற்றை விட, உள்ளூர் உணவை சுவைப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
கடற்கரைக்கு செல்வது, வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட உள்ளூர் உணவை சுவைப்பதை அதிகம் விரும்புகின்றனர். மேலும் உணவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் முன்னிலை வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|