தமிழகத்தில் குவியும்  ஜப்பான் முதலீடுகள்தமிழகத்தில் குவியும் ஜப்பான் முதலீடுகள் ... அதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு ஆர்வம் நடப்பாண்டில் முதலீடு 33 சதவீதம் உயர்வு அதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு ஆர்வம் நடப்பாண்டில் முதலீடு 33 சதவீதம் ... ...
‘எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்க’ திருப்பூருக்கு ஆப்ரிக்க நாடுகள் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2018
06:22

திருப்பூர்:தங்­கள் நாட்டு ஜவு­ளித் துறை­யில் முத­லீடு செய்ய வரு­ம்படி, கிழக்கு ஆப்­ரிக்க நாடு­க­ளின் அமைச்­சர்­கள், நேற்று திருப்­பூ­ருக்கு வந்து அழைப்பு விடுத்­த­னர்.வெளி­மா­நில, வெளி­நாட்டு அர­சு­கள், திருப்­பூர் பின்­ன­லாடை துறை­யி­னரை, தங்­கள் பகு­தி­களில் முத­லீடு செய்ய, தொடர்ந்து அழைப்பு விடுத்து வரு­கின்­றன. அவ்­வ­கை­யில், கிழக்கு ஆப்­ரிக்க நாடுக­ளின் அமைச்­சர்­கள், நேற்று திருப்­பூர் வந்­த­னர்.
ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க அரங்­கில் நடந்த கூட்­டத்­தில், எத்­தி­யோப்­பியா தொழில் துறை அமைச்­சர் போக்லே, கென்யா தொழில் மற்­றும் வர்த்­தக அமைச்­சர் பெடி மைனா, உகாண்டா வர்த்­தக அமைச்­சர் மீச்­ஷேல் வர்க்கி மற்­றும் சர்­வ­தேச வர்த்­தக அமைப்பு ஒருங்­கி­ணைப்­பா­ளர் குழு­வி­னர், மூன்று நாடு­க­ளின் அரசு அதி­கா­ரி­கள் பங்­கேற்று, ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க நிர்­வா­கி­க­ளு­டன் கலந்­து­உரை­யா­டி­னர்.
ஆப்­ரிக்க நாட்டு அமைச்­சர்­கள் கூறி­ய­தா­வது:கிழக்கு ஆப்­ரிக்­கா­வில், கென்யா, எத்­தி­யோப்­பியா, உகாண்டா நாடு­கள், நட்பு நாடு­க­ளாக உள்­ளன. பின்­தங்­கிய நாடு­க­ளாக உள்­ள­தால், மூன்று நாடு­க­ளி­லும், வேலை­ வாய்ப்பு குறை­வாக உள்­ளது. எனவே, அதி­க­ள­வில் வேலை­ வாய்ப்பு அளிக்­கும், ஜவு­ளித் துறையை விரி­வு­ப­டுத்­தும் முயற்­சி­கள் நடந்து வரு­கின்­றன.நிறு­வ­னங்­கள், திறன் பயிற்சி பெற்ற தொழி­லா­ளர்களை பணி அமர்த்­திக் கொள்ள முடி­யும். அரசு தரப்­பில், அனைத்து வச­தி­க­ளு­டன் தொழில் வளா­கங்­கள் உரு­வாக்கி தரப்­படும்; ஆடை உற்­பத்தி துறை­யி­னர், மிஷின்­களை நிறுவி, உட­ன­டி­யாக இயக்­கத்தை துவக்­கி ­வி­ட­லாம். துறை­மு­கங்­கள், ரயில் போக்­கு­வ­ரத்து வாயி­லாக இணைக்­கப்­பட்­டுள்­ளன.
பின்­தங்­கிய நாடு­கள் என்­ப­தால், அமெ­ரிக்கா, ஐரோப்பா உட்­பட பல்­வேறு நாடு­க­ளுக்கு, ஏற்­று­மதி செய்­யும் ஆடை­க­ளுக்கு, இறக்­கு­மதி வரி விலக்கு கிடைக்­கிறது.திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், கிழக்கு ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு வர­வேண்­டும். தொழில் சூழல்­களை ஆராய்ந்து, முத­லீடு செய்­ய­லாம்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர், ராஜா சண்­மு­கம் மற்­றும் நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர். முன்­ன­தாக, கிழக்கு ஆப்­ரிக்க அமைச்­சர்­கள், பின்­ன­லாடை தொழில் நிறு­வ­னங்­களை பார்­வை­யிட்­ட­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)