‘எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்க’ திருப்பூருக்கு ஆப்ரிக்க நாடுகள் அழைப்பு‘எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்க’ திருப்பூருக்கு ஆப்ரிக்க நாடுகள் ... ... தமிழகத்தின் 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கம் தமிழகத்தின் 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கம் ...
அதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு ஆர்வம் நடப்பாண்டில் முதலீடு 33 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2018
06:24

புது­டில்லி:இந்த நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், பங்­குச் சந்­தை­யில் முத­லீடு செய்­யப்­படும் மியூச்­சு­வல் பண்­டு­க­ளுக்கு, 33 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீ­டு­கள் வந்­துள்­ளன. இது, கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 15 சத­வீ­தம் அதி­கம்.
‘கடந்த ஆண்டு, ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான கால­கட்­டத்­தில், பங்­குச் சந்­தை­யில் முத­லீடு செய்­யும் மியூச்­சு­வல் பண்­டு­க­ளுக்கு, 28 ஆயி­ரத்து, 332 கோடி ரூபாய் மட்­டுமே வந்­தது. ‘தற்­போது, சிறு நக­ரங்­களில் உள்ள சிறு முத­லீட்­டா­ளர்­கள், மியூச்­சு­வல் பண்­டில் முத­லீடு செய்ய மிக­வும் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். அத­னால், இந்த அள­வுக்கு முத­லீடு பெரு­கி­யுள்­ளது’ என்­கிறது, ‘ஆம்பி’ எனப்­படும், இந்­திய மியூச்­சு­வல் பண்­டு­க­ளின் கூட்­ட­மைப்பு.
இது தொடர்­பாக, ஆம்­பி­யின் தலைமை நிர்­வா­கி­யான, என்.எஸ்.வெங்­க­டேஷ் கூறி­ய­தா­வது:பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யின் வழி­காட்­டு­த­லின்­படி, ஆம்பி மேற்­கொண்ட மியூச்­சு­வல் பண்டு விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்­தால், முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் பெரும் ஆர்­வம் ஏற்­பட்­டுள்­ளது.அவர்­கள் மியூச்­சு­வல் பண்டை நல்­ல­தொரு முத­லீட்டு வாய்ப்­பாக பார்க்க ஆரம்­பித்­துள்­ள­னர்.சமீ­பத்­திய ஏற்ற, இறக்­கங்­களை மீறி, மியூச்சு­வல் பண்­டு­க­ளுக்கு வரும் தொகை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்றே நாங்­கள் நம்­பு­கி­றோம்.
குறிப்­பாக, இந்­தி­யா­வில் உள்ள, 30 சிறு­ந­க­ரங்­களில் இருந்து, எஸ்.ஐ.பி., எனும் சிஸ்­ட­மே­டிக் இன்­வெஸ்ட்­மென்ட் பிளான் வழி­யாக, சிறு­ மு­த­லீட்­டா­ளர்­கள் ஏரா­ள­மாக பங்கு பெற்று வரு­கின்­ற­னர்.பங்­குச் சந்தை சார்ந்த மியூச்­சு­வல் பண்­டு­க­ளுக்கு வரும் முத­லீ­டு­கள், தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கின்­றன. நடப்­பாண்­டில், பங்­குச்சந்­தை­களில் தடு­மாற்­றம் தெரிந்­தா­லும், மக்­கள் நீண்ட கால பார்­வை­யோடு, பங்­கு­களில் முத­லீடு செய்­யப்­படும் மியூச்­சு­வல் பண்­டு­களை அணுகி வரு­கின்­ற­னர்.குறிப்­பாக, தற்­போது மாதாந்­திர, எஸ்.ஐ.பி., மூலம், 7,300 கோடி ரூபாய் வரு­கிறது. அடுத்து வரும் மாதங்­களில், இந்­தத் தொகை உய­ரவே வாய்ப்­புள்­ளது.
நீண்ட கால அள­வில், பங்­குச் சந்தை முத­லீ­டு­க­ளால் நிலை­யான சொத்­து­களை உரு­வாக்க முடி­யும் என, சிறு முத­லீட்­டா­ளர்­கள் நம்­பு­வதே இதற்கு கார­ணம்.இந்த முதல் காலாண்­டில், ஏப்­ரல் மாதத்­தில், 12 ஆயி­ரத்து, 409 கோடி ரூபா­யும்; மே மாதத்­தில் 12 ஆயி­ரத்து, 70 கோடி ரூபா­யும்; ஜூன் மாதத்­தில், 8,237 கோடி ரூபா­யும்; ஆகமொத்­தம், 32 ஆயி­ரத்து, 716 கோடி ரூபாய், பங்­குச்சந்தை சார்ந்த மியூச்­சு­வல்பண்­டு­க­ளுக்கு வந்து சேர்ந்­துள்­ளது.
இந்த காலாண்­டில், பங்­குச் சந்தை மற்­றும் கடன் பத்­தி­ரங்­கள் சார்ந்த ஒட்­டு­மொத்த மியூச்­சு­வல் பண்­டு­க­ளுக்கு, 1.4 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு வந்­துள்­ளது. ஜூன் இறுதி நில­வ­ரப்­படி, மியூச்­சு­வல் பண்­டு­க­ளுக்கு வந்­துள்ள மொத்த தொகை, 7.86 லட்­சம் கோடி ரூபாய், கடந்த ஆண்­டில் இதே கால­கட்­டத்­தில் திரட்­டப்­பட்ட மொத்த தொகை, 5.91 லட்­சம் கோடி ரூபாய் மட்­டுமே.நடப்பு ஆண்­டில் ஜூனு­டன் முடிந்த கால­கட்­டத்­தில் மட்­டும், மியூச்­சு­வல் பண்­டு­களில் திரட்­டப்­பட்­டுள்ள தொகை, 33 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)