பதிவு செய்த நாள்
11 ஜூலை2018
00:33
பெங்களூரு:டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 6.3 சதவீதம் அதிகரித்து, 7,340 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 6,904 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், நிறுவனத்தின் வருவாய், 6.8 சதவீதம் உயர்ந்து, 32,075 கோடியில் இருந்து, 34,261 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஊதிய உயர்வு, விசா கட்டணம் அதிகரிப்பு, பணியாளர் நியமனம் உள்ளிட்டவற்றால், நிறுவனத்தின் நிகர லாபம் குறையும் என, சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருந்தனர்.
இந்த இடர்ப்பாடுகளை, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால், நிறுவனம் ஓரளவு சமாளித்துள்ளது.நேற்று, இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளிவருவதை முன்னிட்டு, பங்கு விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.எனினும், மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் முடிவில், பங்கின் விலை, முன்தினத்தை விட, 0.56 சதவீதம் குறைந்து, 1,877 ரூபாயில் நிலை பெற்றது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|