அதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு ஆர்வம் நடப்பாண்டில் முதலீடு 33 சதவீதம் உயர்வுஅதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு ஆர்வம் நடப்பாண்டில் முதலீடு 33 சதவீதம் ... ... தமிழகத்தில் விரைவில் புதிய ஜவுளி கொள்கை  ஈரோட்டில் அமைச்சர் தகவல் தமிழகத்தில் விரைவில் புதிய ஜவுளி கொள்கை ஈரோட்டில் அமைச்சர் தகவல் ...
தமிழகத்தின் 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
00:35

சென்னை:தமி­ழ­கத்­தின், 25 பொதுத் துறை நிறு­வ­னங்­கள், 9,366.31 கோடி ரூபாய் நஷ்­டத்­தில் செயல்­ப­டு­வ­தாக, மத்­திய தணிக்கை துறை­யின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இது குறித்து, அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
தமி­ழ­கத்­தில், மொத்­தம், 68 பொதுத் துறை நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்றன. ஆறு செயல்­ப­டாத பொதுத் துறை நிறு­வ­னங்­களும் உள்ளன.

39 நிறு­வ­னங்­கள் லாபம்
கடந்த, 2017ம் ஆண்டு மார்ச் வரை­யில், இந்த நிறு­வ­னங்­களின் மொத்த விற்­பனை வரவு, ஒரு லட்­சத்து, 10 ஆயி­ரத்து, 850 கோடி ரூபா­யாக உள்­ளது. மொத்த நஷ்­டம், 78 ஆயி­ரத்து, 854 கோடி ரூபா­யா­கும்.தமி­ழ­கத்­தில் செயல்­படும், 68 பொதுத் துறை நிறு­வ­னங்­களில், 39 நிறு­வ­னங்­கள், 931.08 கோடி ரூபாய் லாபத்­தில் இயங்கு ­கின்றன. 25 நிறு­வ­னங்­கள், 9,366.31 கோடி ரூபாய் நஷ்­டத்­தில் செயல்­ப­டு­கின்றன.
இதில், தமிழ்­நாடு செய்­தித்­தாள் காகித நிறு­வ­னம், 257.53 கோடி; தமிழ்­நாடு மின்­விசை நிதி, அடிப்­படை வசதி மேம்­பாடு நிறு­வ­னம், 129.74 கோடி; டைடல் பார்க் நிறு­வ­னம்,, 49.28 கோடி ரூபாய் என, பல்­வேறு நிறு­வ­னங்­கள் லாபத்­தில் முக்­கிய இடம் பெற்­றுள்ளன.தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மான கழ­கம், 5,786.82 கோடி ரூபாய், எட்டு அரசு போக்­கு­வ­ரத்து கழ­கங்­கள், 3,049.39 கோடி ரூபாய் என, இவை நஷ்­டத்­தில் பெரும் பங்கு வகிக்­கின்றன. மேலும், மூன்று நிறு­வ­னங்­கள் லாபம் மற்­றும் நஷ்­டத்தை ஈட்­ட­வில்லை.
வீண் செலவு
செயல்­ப­டாத ஆறு நிறு­வ­னங்­களில், ஒரு நிறு­வ­னத்தை மூட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்றன. ஆனால், ஆறு நிறு­வ­னங்­க­ளை­யும் மூட, அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.கப்­பல்­களின் மேலாண்மை குறை­பா­டு­கள் கார­ண­மா­க­வும், சாலைப் பணிக்கு நிலம் கிடைக்க சாத்­தி­யத்தை உறுதி செய்­யா­த­தா­லும், வீண் செலவு ஏற்­பட்­டுள்­ளது.
மேலும், வெள்ள மேலாண்மை பணி­களை கையாள ஏற்­பட்ட தாம­தத்­தா­லும், கட்­டப்­பட்ட பேருந்­து­களை இயக்­கு­வ­தில் கால­தா­ம­தம் ஏற்­பட்­ட­தா­லும், 12 பொதுத் துறை நிறு­வ­னங்­களில், 1,766.49 கோடி ரூபாய் வீண் செலவு ஏற்­பட்­டுள்­ளது.மேலும், மாறு­படும் விலை விகி­தத்­தின் அடிப்­ப­டை­யில், வெளி­நாட்டு நிலக்­க­ரியை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான விலைப் புள்­ளி­களை இறுதி செய்­யா­த­தால், டான்­ஜெட்­கோ­விற்கு, 746.13 கோடி ரூபாய் கூடு­தல் செலவு ஏற்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)