வீடுகளுக்கு குழாய் மூலம், ‘காஸ்’  15 நகரங்களுக்கு ரிலையன்ஸ் விண்ணப்பம் வீடுகளுக்கு குழாய் மூலம், ‘காஸ்’ 15 நகரங்களுக்கு ரிலையன்ஸ் விண்ணப்பம் ... இணைய தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல்., அறிமுகம் இணைய தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ...
பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
00:10

சேலம்:பட்­டாணி விலை, கிலோ­வுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்­தது.இந்­தி­யா­வின் பட்­டாணிதேவை, கனடா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்து, 60 சத­வீ­த­மும்; மீதியை, உத்­தர பிர­தே­சம், மஹா­ராஷ்­டிரா, மத்திய பிர­தே­சம், கர்­நா­டகா, ஆந்­திர மாநி­லங்­களும் பூர்த்தி செய்­கின்­றன.
கடந்த, 2015ல், அதன் இறக்­கு­மதி அதி­க­ரித்­த­தால், உரிய விலை­யின்றி, பட்­டாணி பயி­ரி­டும் பரப்பை, விவ­சா­யி­கள் குறைத்­த­னர். அதே நிலை, 2016 – 17ல் தொடர்ந்­தது.இதை­ய­டுத்து, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பட்­டாணி இறக்­கு­ம­திக்கு, மத்­திய அரசு, கடந்த மே மாதம் தடை விதித்­தது. இத­னால், மார்க்­கெட்­டில் பட்­டாணி விலை, கிலோ­வுக்கு, ஆறு முதல், 10 ரூபாய் வரை உயர்ந்­தது. பின், வெளி­நா­டு­கள் விடுத்த கோரிக்­கை­யால், இறக்­கு­மதி தடையை, மத்­திய அரசு விலக்­கி­யது; அதே­நே­ரம், அதற்­கான வரியை, 50 சத­வீ­தம் வரை உயர்த்­தி­யது.
இந்­நி­லை­யில் நேற்று, பட்­டாணி விலை, கிலோ­வுக்கு நான்கு ரூபாய் உயர்ந்­துள்­ளது. குறிப்­பாக, வெள்ளை பட்­டாணி முதல் ரகம் கிலோ, 50க்கு விற்கப்பட்டது, 54 ரூபாய்; இரண்­டாம் ரகம், 42க்கு விற்கப்பட்டது, 46 ரூபாய்; பச்சை பட்­டாணி முதல் ரகம், 80க்கு விற்கப்பட்டது, 84 ரூபாய்; இரண்­டாம் ரகம், 76க்கு விற்கப்பட்டது, 80 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.பட்­டாணி பருப்பு முதல் ரகம், கிலோ, 62க்கு விற்கப்பட்டது, 66 ரூபாய்; இரண்­டாம் ரகம், 56க்கு விற்கப்பட்டது, 60 ரூபா­யாக உயர்ந்­துள்­ள­தால், விவ­சா­யி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)