பதிவு செய்த நாள்
12 ஜூலை2018
00:11
திருப்பூர்:எந்த பகுதியில் இருந்தாலும், ஆடை உற்பத்தி விபரங்களை எளிதாக அறிந்துகொள்ள உதவும் புதிய, ‘சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் இயங்கும் உள்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமானதாக உள்ளது. நடைமுறையில், ஆடை உற்பத்தியின் நிலையை அறிவதற்கு, சில சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இவையெல்லாம் பயன்படுத்த கடினமானதாக உள்ளன.பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், திருப்பூர் பின்னலாடை துறைக்கென, ‘வெரிஷியா’ என்ற சாப்ட்வேரை தயாரித்துள்ளது.
கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் நிறுவி பயன்படுத்தும் வகையில், இந்த சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு வந்த துணி அளவு, ஆடை தயாரிப்புக்கு அனுப்பியதுணி, கையிருப்பு, வெட்டப்பட்ட அளவு, தயாரிக்கப்பட்ட ஆடை எண்ணிக்கை என, அனைத்து விபரங்களையும், இந்த, ‘சாப்ட்வேரில்’ பதிவேற்றம் செய்யலாம்.
ஆடை தயாரிப்பு முழுமை அடைய தேவைப்படும் காலம், காலதாமதத்துக்கான காரணம், எந்த பிரிவில் காலதாமதம் ஏற்படும் என்பதையும் கூட, கணித்துவிடலாம்.ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தொடர்பு வைத்துள்ள நிட்டிங், சாயம், பிரின்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு இந்த சாப்ட்வேரை வழங்கி, விபரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துகின்றனர்.
அனைத்து விபரங்களும் ஓரிடத்தில் கிடைப்பதால், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு, இந்த சாப்ட்வேர் மிகவும் கை கொடுக்கிறது. திருப்பூரில் தற்போது, 20க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள், இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி வருகின்றன.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|