பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
00:52
புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதியை குறைக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய, மத்திய அமைச்சரவை செயலர், பி.கே.சின்ஹா தலைமையில், உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவில், வர்த்தகம், வருவாய், பாதுகாப்பு, தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்தியா, இறக்குமதி பொருட்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கான பரிந்துரைகளை, இக்குழு, மத்திய அரசிடம் வழங்கும்.கச்சா எண்ணெய், தங்கம், மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்தியா, இறக்குமதியை அதிகம் சார்ந்து உள்ளது.
ஆண்டுக்கு, சராசரியாக, 45 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதியாகின்றன. இது, ரூபாய் மதிப்பில், 30 லட்சம் கோடியாகும்.கடந்த, 2017- – 18ம் நிதியாண்டில், இறக்குமதி, 20 சதவீதம் அதிகரித்து, 46 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி, 25.47 சதவீதம் அதிகரித்து, 10,911 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது.
இடைநிலைப் பொருட்கள், மூலப்பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரிக்கும்பட்சத்தில், அது, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முழுமையான பொருட்களின் இறக்குமதி அதிகரித்தால், அது, உள்நாட்டு தயாரிப்பு துறையை பாதிக்கும்.இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இறக்குமதியை குறைக்கும் வழிமுறைகளை ஆராய, உயர்மட்டக் குழு அமைத்துள்ளது.
இக்குழு அளிக்கும் பரிந்துரைப்படி எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், இறக்குமதி வளர்ச்சி கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இடைநிலை பொருட்கள்
இந்தியா, மருந்து தயாரிப்பிற்கான இடைநிலைப் பொருட்களுக்கு, இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. இப்பொருட்கள் இறக்குமதியில், சீனாவின் பங்கு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|