பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
00:13
புதுடில்லி : சிங்கப்பூரின், ‘அப்பிள் ஹோல்டிங்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த, ‘அப்பிள் இந்தியா’ நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
இதற்கான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அளித்துள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 650 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இத்தொகை, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், இதர நிர்வாக திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்ததும், இந்நிறுவனம் பங்கு வெளியீட்டு தேதியை அறிவிக்கும். அப்பிள் இந்தியா நிறுவனம், மொபைல் போன் விளம்பரங்கள், அப்ளிகேஷன்கள் உருவாக்கம், மின்னணு வர்த்தகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை உருவாக்கி தருகிறது.
மேலும், பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான தரவுகளை திரட்டுவது, ஆய்வு செய்வது உள்ளிட்ட சேவைகளிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த, 2009ல், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம், அப்பிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில், குறிப்பிடத்தக்க பங்கு மூலதனம் மேற்கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|