பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:06
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, புதிய, 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளது.
இவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள கரன்சி அச்சகத்தில், புதிய, 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்த கரன்சி, தற்போது உள்ள, 100 ரூபாய் நோட்டின் அளவை விட குறைவாகவும், புதிய, 10 ரூபாயை விட சற்று பெரிதாகவும் இருக்கும். அதில், குஜராத்தில், சரஸ்வதி நதிக் கரையோரம் அமைந்துள்ள, 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, உலகப் புகழ் பெற்ற, ராணி படிக்கல் கிணறு படம் இடம்பெற்றுள்ளது.
புதிய, 100 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தாலும், பழைய, 100 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கி, புதிய, 100 ரூபாய் நோட்டை அடுத்த மாத துவக்கத்தில் வெளியிடும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, தேவாஸ் அச்சகத்தில் தான், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|