பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:11
புதுடில்லி : அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் உருக்கு மீது, 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளதால், அது குறித்து பேசுவதற்காக, இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள இந்த குழுவில், மத்திய வர்த்தக துறை மற்றும் உருக்கு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய அதிகாரிகள் தற்போது அமெரிக்காவில் உள்ளனர். இரு தரப்பு அதிகாரிகளுக்கிடையே, மூன்று நாட்கள் பேச்சு நடைபெற இருக்கிறது. சீனா உள்ளிட்ட பிற நாடுகளோடு ஒப்பிடும்போது, அமெரிக்காவுக்கு, இந்தியா மிக குறைந்த அளவிலேயே உருக்கை ஏற்றுமதி செய்கிறது. அதனால், இந்தியாவுக்கு பெரிய அளவு பாதிப்பு இருக்காது.
அதே சமயம், அமெரிக்காவுக்கு உருக்கு ஏற்றுமதி செய்யும் பிற நாடுகள், அதிக வரி விதிப்பால், அடுத்த கட்டமாக, வேறு சந்தைகளை தேடும். குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முயற்சிக்கும். இது, உள்நாட்டு உருக்கு துறையை பாதிக்க கூடும். இருப்பினும், இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க, இந்திய அரசு தயாராகவே இருக்கிறது. மேலும், இந்தியாவில், அதிகளவில் உருக்கு குவியாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், உருக்கு இறக்குமதி மீது, 25 சதவீத வரியும், அலுமினியத்தின் மீது, 10 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பை அடுத்து, இந்தியா, 29 அமெரிக்க பொருட்களுக்கு, ஆகஸ்ட், 4ம் தேதி முதல், கூடுதல் வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவுடனான பேச்சு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில், இந்த வரி விதிப்பை கைவிட, இந்தியா தயாராக இருப்பதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|