பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:12
சென்னை : டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனம், வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில், முதல் காலாண்டில், 3.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இது குறித்து, டி.சி.எஸ்., தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி, ரவி விஸ்வநாதன், வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு பிரிவின் தலைமை அதிகாரி, கிரித்திவாசன், சென்னை பிரிவின் செயலாக்க துணைத் தலைவர், சுரேஷ் ரமணன் ஆகியோர், சென்னையில் நேற்று கூறியதாவது: டி.சி.எஸ்., நிறுவனம், வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில் முதல் காலாண்டில், 10 ஆயிரத்து, 656 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இது, 2017ம் ஆண்டின் கடைசி காலாண்டை விட, 683 கோடி ரூபாய் அதிகம். சதவீத அடிப்படையில், 3.7 சதவீதம், அதிக வருவாய் முதல் காலாண்டில் ஈட்டப்பட்டுள்ளது. டி.சி.எஸ்.,சின் மொத்த வருவாயில், 40 சதவீதம், வங்கி, நிதி சேவை துறைகள் மூலம் கிடைக்கிறது. வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில், வாடிக்கையாளர்களுக்கான தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கான பணிகளில், டி.சி.எஸ்., ஈடுபட்டுள்ளது. நிதித் துறையில், ஒட்டு மொத்த கட்டமைப்பை உருவாக்கியதில், டி.சி.எஸ்.,சுக்கு முக்கிய பங்கு உள்ளது.
வங்கி துறையில் மிகப் பெரிய மாற்றத்தை, டி.சி.எஸ்., ஏற்படுத்தியுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியமர்த்தப்படும், ஊழியர்கள் மூன்றில், 1 சதவீதம் சென்னையிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் காலாண்டில், மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருப்பதால், அடுத்த மூன்று காலாண்டிலும், அதிக வளர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|