பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:13
சென்னை : ‘‘ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியால், தங்கம் விற்பனை, 95 சதவீதம் முறைப்படுத்தப்பட்ட தொழிலாக முன்னேறியுள்ளது,’’ என, சென்னை, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.
சென்னையில், அனைத்திந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில் சார்பில், ‘லாபம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. அதில், தங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வரி விதிப்பு, தர நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பாக, நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
பின், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சென்னையில், செப்., மாதம், தங்கம் மற்றும் வைர நகைகள் தொடர்பாக, சர்வதேச கண்காட்சி நடக்கிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த, தங்கம் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பங்கேற்கின்றனர். கண்காட்சியில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள், காட்சிக்கு வைக்கப்படும்.
ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன், தங்கம் தொழில், 75 சதவீதம் முறைப்படுத்தப்பட்டு இருந்தது. ஜி.எஸ்.டி.,யில், தங்க ஆபரணங்களுக்கு மட்டுமே, 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., தொடர்பாக, மத்திய அரசு, மக்களிடமும், நகை வியாபாரிகளிடமும், சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதனால், மக்களும், ஜி.எஸ்.டி., வரி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். ஜி.எஸ்.டி., அமலால், தங்கம் விற்பனை, 95 சதவீதம் முறைப்படுத்தப்பட்ட தொழிலாக முன்னேறியுள்ளது. எஞ்சிய, 5 சதவீதமும் விரைவில் முன்னேறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|