சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் சாதனைசிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் சாதனை ... தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.264 சரிவு தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.264 சரிவு ...
பொது துறை வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி; நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு வழங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:17

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, சில வங்­கி­க­ளின் நிதி நெருக்­க­டியை சமா­ளிக்க, மத்­திய அரசு, மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்க உள்­ளது.

வங்­கி­கள், ‘ஏ.டி1’ எனப்­படும் அதிக வட்டி விகி­தம் உள்ள கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, நிதி திரட்­டிக் கொள்­கின்­றன. இந்­நி­லை­யில், அதி­க­ரித்­துள்ள வாராக் கட­னுக்கு ஏற்ப, அதிக நிதி ஒதுக்­கீடு செய்­த­தால், பல வங்­கி­கள் இழப்பை சந்­தித்­துள்­ளன.

அதிக நிதி :
இதன் கார­ண­மாக, வங்­கி­கள், அவற்­றின் வரு­வா­யில் இருந்து, கடன் பத்­தி­ரங்­க­ளுக்கு வட்டி அளிக்க வேண்­டிய நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ளன. இவ்­வாறு, வட்­டிக்கு அதிக நிதி ஒதுக்­கும்­பட்­சத்­தில், வங்­கி­க­ளின் மூல­தன இருப்பு விகி­தம், ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்­துள்ள வரம்பை விட குறை­யும். இத­னால், வங்­கி­கள் விதி­மீ­றல் நட­வ­டிக்­கைக்கு உள்ளாக நேரி­டும். இந்த பிரச்­னைக்கு தீர்­வாக, மத்­திய அரசு, மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், நான்கு அல்­லது ஐந்து வங்­கி­களுக்கு, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்க உள்­ளது.

மறு பங்கு மூலதனம் :
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: பொதுத் துறை­யைச் சேர்ந்த சில வங்­கி­கள், கடன் பத்­திர வட்டி செல­வி­னம் கார­ண­மாக, நிதிப் பற்­றாக்­கு­றையை சந்­தித்­து உள்­ளன. அவற்­றுக்கு, மத்­திய அரசு, மறு பங்கு மூல­தன திட்­டம் மூலம், 8 – 10 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கும். இதன்­படி, பஞ்­சாப் நேஷ­னல் பேங்க், கார்ப்­ப­ரே­ஷன் பேங்க், சென்ட்­ரல் பேங்க் ஆப் இந்­தியா உட்­பட, நான்கு அல்­லது ஐந்து வங்­கி­கள், அடுத்த சில தினங்­களில் மத்­திய அர­சின் நிதி­யு­த­வியை பெறும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மத்­திய அரசு, பொதுத் துறை வங்­கி­க­ளின் நிதி­யா­தா­ரத்தை மேம்­ப­டுத்த, 2017 அக்­டோ­ப­ரில், மறு பங்கு மூல­தன திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அப்­போது, இத்­திட்­டத்­தின் கீழ், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, அடுத்த இரண்டு நிதி­யாண்­டு­களில், 2.11 லட்­சம் கோடி ரூபாய் வழங்­கப்­படும். இதில், மறு பங்கு மூல­தன கடன் பத்­திர வெளி­யீ­டு­கள் மூலம், மத்­திய அர­சின் பங்­காக, 1.35 லட்­சம் கோடி ரூபாய் அளிக்­கப்­படும். எஞ்­சிய, 58 ஆயி­ரம் கோடி ரூபாய், வங்­கி­கள், பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்­டிக் கொள்­ளும் என, தெரி­விக்­கப்­பட்­டது.

இதன்­படி, மத்­திய அரசு ஏற்­க­னவே, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, கடன் பத்­தி­ரங்­கள் மூலம், 71 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கி­யுள்­ளது. எஞ்­சிய தொகை­யில், தற்­போது, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கப்­பட உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

வாராக் கடன் :
பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக் கடன், 10 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. அத­னால், வங்­கி­கள், வாராக் கட­னுக்­கான ஒதுக்­கீட்டை அதி­க­ரித்­துள்­ளன. இத­னால் ஏற்­பட்­டுள்ள நிதி நெருக்­க­டியை சமா­ளிக்க, வங்­கி­கள், பங்கு வெளி­யீட்டை மேற்­கொள்ள உள்­ளன. பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­களில், 13 வங்­கி­க­ளின் இயக்­கு­னர் குழுக்­கள், பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி அளித்­துள்­ளன. இந்த வகை­யில், வங்­கி­கள், 50 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)