நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற ... ... அன்னிய நேரடி முத­லீடு: சரிவு ஏன்? அன்னிய நேரடி முத­லீடு: சரிவு ஏன்? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
23:24

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்டி, கடந்த வாரம் பெரிய மாற்­றங்­கள் இல்­லா­மல், துவங்­கிய புள்­ளி­க­ளி­லேயே முடி­வுற்­றது.

இதற்கு முந்­தைய இரு வாரங்­க­ளாக, சந்தை உயர்ந்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. 140 புள்­ளி­கள் ஏற்ற, இறக்­கங்­க­ளு­டன், 11,010 புள்­ளி­களில் வர்த்­த­கம் முடி­வுற்­றது. நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், பெரும்­பா­லான பங்­கு­கள் சரிவை சந்­தித்­தன. இதற்கு சில முக்­கிய கார­ணங்­கள் உள்ளன. ‘செபி’ கொண்டு வந்த புதிய கொள்கை முடிவு முக்­கி­ய­மான ஒன்று. மேலும், ‘லார்ஜ் கேப் ஸ்மால் கேப்’ போன்ற வகை­க­ளுக்­கான புதிய வரை­முறை அறி­விக்­கப்­பட்­டது.

பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­களின் நிதி ஒதுக்­கீடு மற்­றும் துறை வாரி­யாக முத­லீடு செய்­வது குறித்த, செபி­யின் இந்த புதிய கொள்கை முடி­வின் கார­ண­மாக, பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­கள், தங்­க­ளி­டம் இருந்த பங்­கு­களை மொத்­த­மாக விற்­பனை செய்ய நேர்ந்­தன. இரண்­டா­வ­தாக, தேசிய பங்­குச் சந்தை கொண்டு வந்த, கூடு­தல் கண்­கா­ணிப்பு வழி­முறை. இதன் மூல­மாக, வாங்­கக் கூடிய பங்­கு­களில் மொத்­தத் தொகையை செலுத்த வேண்­டும் என்­ப­தா­லும், பல பங்­கு­கள் இந்த கூடு­தல் கண்­கா­ணிப்பு பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தன் கார­ண­மா­க­வும், பங்­கு­கள் விலை­யில் பாத­க­மான போக்கு ஏற்­பட்­டது.

நிப்டி, 11,171 புள்ளி மற்­றும் சென்­செக்ஸ் புதிய வர­லாற்று உச்­ச­மான, 36,740 புள்­ளியை எட்­டி­யது. இந்த உயர்­வுக்கு, இன்­போ­சிஸ் மற்­றும் ரிலை­யன்ஸ் நிறு­வ­னங்­கள் உந்­து­த­லாக அமைந்­தன.

டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக, தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் வரு­மா­னம் அதி­க­ரிக்­கும் என்ற கோணத்­தி­லும், கச்சா எண்­ணெய் விலை குறை­வால், நம் நாட்­டின் இறக்­கு­மதி பில் தொகை குறை­யும் என்­ப­தா­லும் சந்தை வலுப்­பெற்­றது.

கடந்த வாரத்­தில், பார்­லி­மென்­டில், எதிர்க்­கட்­சி­கள் நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் கொண்­டு­வர வேண்­டும் என்று மேற்­கொண்ட அம­ளி­யால், பங்­குச் சந்­தை­கள் தடு­மா­றின. பின் ஏற்­பட்ட சுமு­க­மான சூழல் மற்­றும் அசா­தா­ரண சூழல் இல்லை எனும் நிலை, இனி சந்­தைக்கு சாத­க­மாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்­டி­யின் முதல் ரெசிஸ்­டென்ட், 11,270 மற்­றும் 11,240. சப்­போர்ட் 10,920.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)