பதிவு செய்த நாள்
23 ஜூலை2018
23:54
மும்பை : மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, நேற்று, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
மத்திய நிதியமைச்சர் பொறுப்பில் உள்ள, பியுஷ் கோயல் தலைமையில், 22ல், நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. குறிப்பாக, வாஷிங் மிஷின், ரெப்ரிஜிரேட்டர், சிறிய திரை, ‘டிவி’ உள்ளிட்டவற்றின் வரி, 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
‘சானிட்டரி நாப்கின்’ நுண்ணுாட்டச் சத்துள்ள பால்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, நேற்று பங்குச் சந்தையில், ஐ.டி.சி., ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஏஷியன் பெயின்ட்ஸ் உட்பட, நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதன நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 222.23 புள்ளிகள் அதிகரித்து, 36,718.60 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இம்மாதம், 12ம் தேதி, 36,548.41 புள்ளிகளை எட்டியது தான் உச்சமாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 74.55 புள்ளிகள் உயர்ந்து, 11,084.75 புள்ளிகளில் நிலை கொண்டது. இக்குறியீடு, இந்தாண்டு ஜன., 29ல், 11,130.40 புள்ளிகள் என்ற அளவில், புதிய உச்சத்தை கண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|