பதிவு செய்த நாள்
23 ஜூலை2018
23:55
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, அவற்றின் விற்றுமுதல் அடிப்படையில் வகைப்படுத்தும் மசோதா, பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங், லோக்சபாவில், மசோதாவை தாக்கல் செய்தார்.
ஆர்வமில்லை :
தற்போது, சரக்கு தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் ஆலை மற்றும் இயந்திரங்களில் செய்த முதலீட்டின் அடிப்படையில், குறு, சிறு, நடுத்தரநிறுவனங்கள் என, பிரிக்கப்படுகின்றன. இதனால், பல நிறுவனங்கள் புதிய முதலீடுகளையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டாமல் உள்ளது, ஆய்வொன்றில் தெரியவந்தது.
இதற்கு, முதலீடுகள் உயரும் போது, குறு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் அல்லது நடுத்தர நிறுவனங்கள் பிரிவுகளுக்கு மாற நேரும்; தற்போது கிடைத்து வரும் ஊக்கச் சலுகைகள் குறையும் என்ற அச்சம் தான் காரணம். இத்தகைய எதிர்மறை சிந்தனையை அகற்றி, நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கமாக வைத்து செயல்பட வேண்டும் என்பதற்காக, மசோதா, தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
விற்றுமுதல் :
இதன்படி, இனி, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், குறுநிறுவனங்களாக கருதப்படும். அதுபோல, 5 கோடி ரூபாய்க்கு மேல், 75 கோடி ரூபாய் வரை, விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என்ற பிரிவில் சேர்க்கப்படும். நடுத்தர நிறுவனங்களுக்கு, ஆண்டு விற்றுமுதல், 75 – 250 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு, பார்லி., ஒப்புதல் அளித்ததும், புதிய நடைமுறை அமலுக்கு வரும். இந்த மாற்றம் மூலம், நிறுவனங்கள், வங்கி கடன் பெறுவது, தொழில் புரிவது மேலும் சுலபமாகும். ஜி.எஸ்.டி., விபரங்களின் அடிப்படையில், நிறுவனங்களை எளிதாக வகைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|