பதிவு செய்த நாள்
23 ஜூலை2018
23:57
புதுடில்லி : அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், பெங்களூரில் ஒப்பந்த உற்பத்தியாளர், மூலம், சில, ‘ஐ போன்’ மாதிரிகளை தயாரிக்க ஆரம்பித்திருப்பதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி நேற்று பார்லிமென்டில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: தொழில்நுட்ப துறையை சேர்ந்த, மிகப்பெரிய ஆப்பிள் நிறுவனம், பெங்களூரில் ஒப்பந்த முறையில், போன் மாதிரிகளை தயாரிக்க துவங்கி உள்ளது. ஆனால், அந்த தனியார் வணிக நிறுவனத்தின், வர்த்தக ரீதியிலான பிற தகவல்கள், மத்திய அரசிடம் தற்போது இல்லை.
உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்குவதில் வரி சலுகை குறித்து பல தரப்புகள் மூலமாக, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இருப்பினும், அவை எதுவும் ஏற்கப்பட வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்னொரு கேள்விக்கான பதிலின் போது, ஜூன், 15 வரையிலான காலகட்டத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அங்கீகரிக்க கோரி, 16,324 நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 11,129 நிறுவனங்களை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களாக அங்கீகரித்துள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|