பதிவு செய்த நாள்
23 ஜூலை2018
23:58
புதுடில்லி : மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 2 கோடி கார்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கெனிச்சி அயகவா கூறியதாவது: மாருதி நிறுவனம், 1983, டிசம்பரில், கார் தயாரிப்பில் இறங்கியது. 1994, மார்ச்சில், 10 லட்சமாவது கார் வெளிவந்தது. இது, 2005, ஏப்ரலில், 50 லட்சம் ; 2011 மார்ச்சில், ஒரு கோடியாக உயர்ந்தது. அடுத்த, ஏழு ஆண்டுகளில், கார் தயாரிப்பு, இரண்டு கோடியை எட்டியுள்ளது. 34 ஆண்டுகள், ஆறு மாதங்களில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில்,இச்சாதனை புரிந்த ஒரே நிறுவனம், மாருதி சுசூகி. இது, நிறுவனத்தின் மீது, வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. டில்லி அருகே, குருகிராம் ஆலை, 1.44 கோடி; ஹரியானாவின் மானேசர் ஆலையில், 56 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிறுவனம், 16 மாடல்களில் கார்களை தயாரிக்கிறது. அவை, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆப்ரிக்கா, உட்பட, 100க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானின், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன், மாருதி சுசூகி நிறுவனத்தில், 56.21 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|