2 கோடி கார் தயாரித்து மாருதி சுசூகி சாதனை2 கோடி கார் தயாரித்து மாருதி சுசூகி சாதனை ... லாரி ஸ்டிரைக் எதிரொலி; விதை நெல் தேக்கம் லாரி ஸ்டிரைக் எதிரொலி; விதை நெல் தேக்கம் ...
பொது நிறுவனங்களில் அரசு பங்கு குறைப்பு: மத்திய நிதியமைச்சகத்தின் புதிய முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2018
00:00

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, 10 நிறு­வ­னங்­களில், மத்­திய அர­சின் குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை, ‘எஸ்.என்.ஐ.எப்.,’ என்ற அமைப்­பிற்கு மாற்ற, மத்­திய நிதி­அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது.

பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யின் புதிய விதி­மு­றைப்­படி, பொதுத் துறை நிறு­வ­னத்­தில், பொது­மக்­க­ளின் பங்கு மூல­த­னம், குறைந்­த­பட்­சம், 25 சத­வீ­தம் இருக்க வேண்­டும். கடந்த, 2017ஆக.,21ல் அம­லுக்கு வர வேண்­டிய இந்த விதி­முறை, மத்­திய அர­சின் கோரிக்­கையை ஏற்று, ஓராண்டு தள்ளி வைக்­கப்­பட்­டது. அதன்­படி, புதிய விதி­மு­றையை அமல்­ப­டுத்­து­வ­தற்­கான, ‘கெடு’ அடுத்த மாதம் முடி­வ­டைய உள்­ளது.

மாற்று திட்டம் :
அதற்­குள், பொதுத்­து­றை­யைச் சேர்ந்த பல நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, பொது­மக்­க­ளுக்கு பங்­கு­களை ஒதுக்க இய­லாத சூழல் உள்­ளது. அதே­ச­ம­யம், மீண்­டும் கால நீட்­டிப்பு கோர முடி­யாத நெருக்­கடி, மத்­திய அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அத­னால், இப்­பி­ரச்­னைக்கு மாற்று திட்­டத்தை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தயா­ரித்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ‘செபி’யின் பழைய விதி­மு­றைப்­படி, பொதுத் துறை நிறு­வ­னங்­கள், பொது­மக்­க­ளுக்கு குறைந்­தது, 10 சத­வீத பங்­கு­களை கட்­டா­யம் ஒதுக்க வேண்­டும். அவ்­வாறு ஒதுக்க முடி­யாத கார­ணத்­தால், மத்­திய அரசு, 2013ல், ‘எஸ்.என்.ஐ.எப்.,’என்ற சிறப்பு தேசிய முத­லீட்டு நிதி­யத்தை உரு­வாக்­கி­யது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, பேக்ட், ஹிந்துஸ்­தான் போட்டோ பிலிம், எச்.எம்.டி., ஸ்கூட்­டர்ஸ் இந்­தியா, ஆண்ட்ரூ அண்டு யூல், ஐ.டி.ஐ., ஆகிய, நலி­வ­டைந்த ௬ நிறு­வ­னங்­க­ளின், 10 சத­வீத பங்­கு­கள் மாற்­றப்­பட்­டன.

ஒப்புதல் :
அது­போல, தற்­போது, பொதுத் துறை­யைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., – ஐ.டி.டி.சி., உட்­பட, 10 நிறு­வ­னங்­களில் குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை, ‘எஸ்.என்.ஐ.எப்.,’ அமைப்­பிற்கு மாற்ற, நிதி­ய­மைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது.இது தொடர்­பான நட­வ­டிக்கை, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­த­பின் மேற்­கொள்­ளப்­படும். இதன் மூலம், ‘செபி’ விதி­மு­றைப்­படி, பொதுத் துறை நிறு­வ­னங்­களில், மத்­திய அர­சின் பங்கு மூல­த­னம், 75 சத­வீ­த­மாக குறை­யும்.

கோல் இந்­தியா மற்­றும் என்.எல்.சி., நிறு­வ­னங்­களில், மத்­திய அர­சின் பங்கு மூல­த­னம், முறையே, 78.32 சத­வீ­தம் மற்­றும், 84.04 சத­வீ­த­மாக உள்­ளது. இவற்­றின் பங்கு விற்­பனை தொடர்­பான நட­வ­டிக்­கைகளை, மத்­திய அரசு ஏற்­க­னவே துவக்­கி­யுள்­ளது. எனி­னும், ‘கெடு’ காலத்­திற்­குள், பங்கு விற்­பனை நடக்காத பட்­சத்­தில், அந்­நி­று­வ­னங்­க­ளின், குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­கள், ‘எஸ்.என்.ஐ.எப்.,’க்கு மாற்­றப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

நிறுவனங்கள் பட்டியல் :
எம்.எம்.டி.சி., – ஐ.டி.டி.சி., – எம்.ஆர்.பி.எல்., ஹிந்துஸ்­தான் காப்­பர், கோல் இந்­தியா, என்.எல்.சி., – எஸ்.ஜே.வி.என்., ஸ்டேட் டிரே­டிங் கார்ப்­ப­ரே­ஷன், குத்­ர­முக் ஐயர்ன் ஓர் கம்­பெனி, மெட்­ராஸ் பெர்­டி­லை­சர்ஸ் ஆகிய, 10 நிறு­வ­னங்­களில், பங்கு மூல­த­னத்தை குறைக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)