பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:14
உடுமலை : குறுவை சாகுபடி பணி துவங்கியுள்ள நிலையில், லாரி ஸ்டிரைக் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய விதை நெல் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு, ஆண்டுக்கு, 1.50 லட்சம் டன் விதை நெல் தேவைப்படுகிறது. 200 தனியார் நிறுவனங்கள், 55 ஆயிரம் டன் விதை நெல் உற்பத்தி செய்கின்றன. இது தவிர, அரசு விதை உற்பத்தி நிறுவனங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் விதை நெல் வாங்குகின்றனர்.
தமிழக விதை நெல் உற்பத்தியில், 40 சதவீதம் வரை, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், பல்லடம் தாலுகாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஐந்து நாட்களாக நீடித்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக, விதை நெல் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விதை உற்பத்தியாளர் சங்க மாநிலச் செயலர், காளிதாஸ் கூறியதாவது: குறுவை, சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல், கோவை, திருப்பூர் மாவட்ட நிறுவனங்களில், 25 ஆயிரம் டன் தயாராக உள்ளது. விதைப்பு சீசன் துவங்கிய நிலையில், ஐந்து நாட்களாக நீடித்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக, விதை நெல்லை, டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. விதை நெல் வினியோகத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|