பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:15
சென்னை : மஹிந்திரா மியூச்சுவல் பண்டு நிறுவனம், ‘மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா’ என்ற, புதிய கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து, மஹிந்திரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அஷுடொஷ் பிஸ்னோய் சென்னையில் நேற்று கூறியதாவது: ‘மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா’ திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், இந்த முதலீட்டை பணமாக்குவது எளிது. இந்த பண்டு திட்டத்தில் திரட்டப்படும் நிதி, நடுத்தரம் முதல் அதிக பாதுகாப்பு கொண்ட தரமான நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்த திட்டம் நடுத்தரம் மற்றும் நீண்டகாலத்தில், நியாயமான வருமானம் மற்றும் மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு, மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இது, எப்போது வேண்டுமானாலும், முதலீடு செய்யும் மற்றும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதியை கொண்ட கடன் சார்ந்த திட்டமாகும். புதிய பண்டு வெளியீடு, ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|