பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:15
புதுடில்லி : மரபு சாரா எரிசக்தி துறையைச் சேர்ந்த ரிநியூ பவர் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனம் விரைவில் பங்கு வெளியீடு மேற்கொண்டு, 2,600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இத்தொகை, பிற நிறுவனங்களை கையகப்படுத்தவும், இதர நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஏற்கனவே வெளியிட்ட, சில கடன் பத்திரங்களை திரும்பப் பெறவும், இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கு, பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் தொகையில், குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்த் சின்ஹா என்பவரால், 2011ல் துவங்கப்பட்ட, ரிநியூ பவர் நிறுவனம், 5,600 மெகாவாட் மரபு சாரா மின் உற்பத்தி திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, பல்வேறு தொழிற்சாலைகளுக்கும், வணிக மையங்களுக்கும் வழங்கி வருகிறது. தற்போது, பல்வேறு பகுதிகளில், மின் உற்பத்திக்கான கட்டுமான பணியிலும் ஈடுபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|