பதிவு செய்த நாள்
25 ஜூலை2018
23:13
உடுமலை : லாரி, ‘ஸ்டிரைக்’ காரணமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தவிப்பில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பல்லடம், தாராபுரம் பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக, கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வருவதில்லை. இதனால், விலையும் சரிந்துள்ளது. விதைப்பின் போது இருந்த விலையில், நான்கில் ஒரு பங்கு கூட இல்லை.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு வறட்சி காரணமாக, சின்ன வெங்காயம், 1 கிலோ, 120 ரூபாய் வரை விற்றது. லாரி ஸ்டிரைக் நடப்பதால், ‘வெங்காயம் வாங்கினாலும் வெளியூர் அனுப்ப முடியாது’ எனக் கருதி, வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதில்லை. வரும் ஒரு சிலரும், கிலோ, 25 ரூபாய்க்கு கேட்கின்றனர். அந்த விலைக்கு கொடுத்தால், நஷ்டம் தான் வரும். இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என்றாலும், பருவ மழை காரணமாக காய வைப்பது, பட்டறை அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|