பதிவு செய்த நாள்
25 ஜூலை2018
23:14
புதுடில்லி : ‘‘மாருதி சுசூகி நிறுவனம், 2025ல், ஆண்டுக்கு, 30 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் உள்ளதாக உயரும்,’’ என, அதன் தலைவர், ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
அவர், கடந்த நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் ஆலையின் முதல் பிரிவில், முழு உற்பத்தி நடைபெறுகிறது. இரண்டாவது பிரிவில், 2019 துவக்கத்தில் உற்பத்தி துவங்கும். மூன்றாவது பிரிவின் பணிகள் துவங்கியுள்ளன. அவை, 2020ல் துவக்கத்தில் முடிவடையும்.
அடுத்த நிதியாண்டில், கார் தயாரிப்பு, 20 லட்சமாகவும், 2025ல், 30 லட்சமாகவும் உயரும். குஜராத் மற்றும் மானேசர் ஆலைகளில், தற்போது, ஆண்டுக்கு, 15 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. சமீபத்தில், ‘ராயல்டி’ தொடர்பாக, தாய் நிறுவனமான, ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் உடன், ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தற்போது, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ மாடலுக்கு மட்டும், ராயல்டி தொகை, ரூபாயிலும், இதர மாடல்களுக்கு, யென் கரன்சியிலும் வழங்கப்படுகிறது. 2025ல், அனைத்து மாடல்களுக்கும், ரூபாயில் ராயல்டி தொகை வழங்கப்படும். இதனால், நிகர விற்பனை அடிப்படையிலான, சராசரி ராயல்டி, 6 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|