கேரட் வரத்து குறைவு; கிலோ ரூ.60 ஆக உயர்வு ஊட்டி : ஊட்டிக்கு கேரட் வரத்து குறைந்து வருவதால், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் விளையும் கேரட்டுக்கு, மேட்டுப்பாளையம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மவுசு அதிகம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும், ஊட்டி மார்க்கெட்டுக்கு, 5 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தொடரும் லாரி, ‘ஸ்டிரைக்’கால், தினமும், 1 டன் அளவுக்கே கேரட் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
லாரி ஸ்டிரைக்கால், அறுவடைக்கு தயாரான கேரட்டை சந்தைக்கு அனுப்புவதில், விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக, ஊட்டி மார்க்கெட் காய்கறி ஏலத்தில், 1 கிலோ கேரட், 30 முதல், 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோவுக்கு அதிகபட்சம், 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான, கேத்தி பாலாடா, எம்.பாலாடா, கோத்தகிரி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், அரசு பஸ்களுக்கு அதற்குண்டான வாடகையை முன்னதாக செலுத்தி மேட்டுப்பாளையம், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு, கேரட் மூட்டைகளை எடுத்துச் செல்கின்றனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட், காய்கறி மொத்த வியாபாரி சங்க நிர்வாகி, ராஜா முகமது கூறுகையில், ‘‘லாரி ஸ்டிரைக்கால் ஊட்டி மார்க்கெட்டுக்கு தற்போது, 1 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு வருகிறது. 35 கிலோ கேரட் அடங்கிய, 1 மூட்டை, 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. லாரி ஸ்டிரைக் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால், மலை காய்கறிகளின் விலை சற்று குறையும்,’’ என்றார்.
தேங்காய் விலை சரிவு; விவசாயிகள் கவலை
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வரத்து குறைவாக இருந்தும் தேங்காய், கொப்பரை விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட பகுதிகளிலிருந்து தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சென்ற ஆண்டு போதுமான மழையில்லாததால், இந்தாண்டு தேங்காய் உற்பத்தி பாதித்துள்ளது.
வரத்து குறைவாக இருந்தும் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது. இதனால், சிறிய தேங்காய் நேற்று, எட்டு ரூபாய்க்கும்; பெரிய தேங்காய், 15 ரூபாய்க்கும்; 1 கிலோ தேங்காய், 35 ரூபாய்க்கும்; கொப்பரை கிலோவுக்கு, 25 குறைந்து, 105 ரூபாய்க்கும் விற்றன.
தேங்காய் வியாபாரி சுதாகரன் கூறுகையில், ‘‘தற்போது வட மாநிலங்களில் திருவிழா காலம். லாரி ஸ்டிரைக்கால், 1,000 டன் தேங்காய் அனுப்ப முடியாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவாக இருந்தும் தேங்காய், கொப்பரை விலை குறைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் முடிவுக்காக காத்திருக்கிறோம்,’’ என்றார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.