பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
23:17
ப.வேலுார் : லாரிகள் வேலை நிறுத்தத்தால், வெல்ல மண்டியில் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும், அச்சு மற்றும் உருண்டை வெல்லம், பிலிக்கல்பாளையத்தில் உள்ள, 13 வெல்ல மண்டிகளுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஏலம் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுப்பர். அவற்றை, லாரிகள் மூலம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, உத்ராஞ்சல், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம், உருண்டை மற்றும் அச்சு வெல்லம், ஒரு சிப்பம் (30 கிலோ), சராசரியாக, 1,100 ரூபாய்க்கு ஏலம் போனது.நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால், ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஏலத்துக்காக, 11 ஆயிரம் உருண்டை வெல்லம், 7,500 அச்சு வெல்லம் என, மொத்தம், 18 ஆயிரத்து, 500 சிப்பம் வெல்லம் கொண்டு வரப்பட்டது. வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏலத்தில் வெல்லத்தை எடுத்தாலும், லாரி ஸ்டிரைக்கால் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லமுடியாது. அதனால், ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தபின், உடனடியாக ஏலம் நடத்தப்படும். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வெல்லம், மண்டியில் தேக்கம் அடைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|