பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
23:21
சென்னை : ‘‘தகவல் தொழில்நுட்பத் துறையில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்,’’ என, ஐ.டி., நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பான, ‘நாஸ்காம்’ தலைவர், தெப்ஜானி கோஸ் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் அவர் கூறியதாவது: ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில், தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதற்கேற்ப, துறையில் உள்ள ஊழியர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, திறமை, புதுமை, சந்தை ஆகிய மூன்று குறிக்கோளை முன்னிறுத்தி, நாஸ்காம் செயல்பட உள்ளது.
பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப பணிகளுக்கு, நடப்பாண்டில், ஐந்து லட்சம் பேர் தேவை. இந்த தேவை என்பது, 2020ல் எட்டு லட்சமாக உயரக்கூடும். அமெரிக்காவில் பணிபுரிவதற்கான, ‘ஹெச் 1 பி விசா’ 2017ல், 43 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|