வரலாறு காணாத உச்சம் தொட்ட, ‘சென்செக்ஸ்’வரலாறு காணாத உச்சம் தொட்ட, ‘சென்செக்ஸ்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.60 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.60 ...
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் சுலபமாகிறது; வரைவு படிவம், 30ம் தேதி வெளியாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
23:26

புதுடில்லி : வணி­கர்­கள் மிகச் சுல­ப­மாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்ய உரு­வாக்­கி­யுள்ள புதிய வரைவு படி­வம், வரும், 30ம் தேதி வெளி­யி­டப்ப­டு­கிறது.

தற்­போ­துள்ள, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் நடை­மு­றை­யில், கடும் சிர­மத்­தை­யும், அதிக செல­வை­யும் சந்­தித்து வரு­வ­தாக, வரி செலுத்­து­வோர் புகார் தெரி­வித்து வரு­கின்­ற­னர். ஒரு நிறு­வ­னம், மாதம் மூன்று முறை வீதம், ஆண்­டுக்கு, 36 முறை கணக்கு தாக்­கல் செய்­கிறது. அத்­து­டன், ஆண்­டின் மொத்த வணிக விபர கணக்­கை­யும் சேர்த்து, ஓராண்­டில், 37 முறை கணக்கு தாக்­கல் செய்ய வேண்­டி­யுள்­ளது.

இதை குறைத்து, ஓராண்­டில், 13 முறை கணக்கு தாக்­கல் செய்­யும் நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. அதன்­படி தயா­ரிக்­கப்­பட்ட புதிய வரைவு கணக்கு தாக்­கல் படி­வத்­திற்கு, கடந்த வாரம் நடை­பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில் ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது.

கருத்து கூறலாம் :
இது குறித்து, ஜி.எஸ்.டி., ஆணை­யர் உபேந்­திர குப்தா கூறி­ய­தா­வது: தற்­போது உள்ள, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 1 மற்­றும் ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ கணக்கு தாக்­கல் படி­வங்­க­ளுக்கு மாற்­றாக, புதிய வரைவு படி­வம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கணக்கு தாக்­கல் வரைவு படி­வம், 30ம் தேதி வெளி­யி­டப்­பட உள்­ளது.

இதில், ஒரு வணி­கர், ஒரு காலாண்­டில், கொள்­மு­தல் அல்­லது விற்­ப­னை­யில் ஈடு­ப­டாத பட்­சத்­தில், அதை, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரி­விக்­கும் வச­தி­யும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. புதிய வரைவு கணக்கு தாக்­கல் படி­வம் குறித்து, வரி செலுத்­து­வோர் அனை­வ­ரும், ஒரு மாதத்­திற்­குள் கருத்து தெரி­விக்­க­லாம்.

அவற்றை, ஜி.எஸ்.டி., கவுன்­சில் பரி­சீ­லித்து, இறுதி வடி­வம் கொடுக்­கும். இது தொடர்­பான, ஜி.எஸ்.டி., சட்ட திருத்­தங்­க­ளுக்கு, நடப்பு பார்­லி­மென்ட் மழைக்­கால கூட்­டத் தொட­ரி­லேயே ஒப்­பு­தல் பெறப்­படும்.இதை தொடர்ந்து, மாநில அர­சு­கள், சட்­ட­ச­பை­களில், ஜி.எஸ்.டி., சட்ட திருத்­தத்தை நிறை­வேற்ற வேண்­டும்.

இதை­ய­டுத்து, ஜி.எஸ்.டி., சட்ட திருத்­தத்­தின் கீழ், 2019, ஜன., 1 முதல், மிகச் சுல­ப­மான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் நடை­முறை, அம­லுக்கு வரும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஜி.எஸ்.டி., சட்டத்தில் செய்யப்பட உள்ள திருத்தங்கள்:

l புதிய, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் நடை­முறை
l ஜி.எஸ்.டி.,யில், ‘காம்­போ­சிட்’ திட்­டத்­தில் இணை­வ­தற்­கான விற்­று­மு­தல், ஒரு கோடி­யில் இருந்து, 1.50 கோடி ரூபா­யாக நிர்­ண­யம்
l ‘ரிவர்ஸ் சார்ஜ்’ திட்­டத்­தில், பொருட்­கள் கொள்­மு­தல் செய்­வோரை பங்­கேற்­கச் செய்­வது
l ஒரு நிறு­வ­னத்­தின் பல்­வேறு வர்த்­த­கங்­க­ளுக்கு தனித் தனி­யாக, ஜி.எஸ்.டி., பதிவு
l ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்­தல்
l பல்­வேறு விலைப்­பட்­டி­யல்­க­ளுக்கு, ஒருங்­கி­ணைந்த, ‘டெபிட் – கிரெ­டிட்’ நோட்­டு­கள் வழங்­கு­தல்


தாமத கட்டணம் ரத்து :
கடந்த, 2017 ஜூலைக்கு முன், கலால், சேவை, மதிப்பு கூட்டு வரி விதிப்­பின் கீழ் செயல்­பட்ட வர்த்­த­கர்­களும், நிறு­வ­னங்­களும், உரிய படி­வத்தை பூர்த்தி செய்து, ஆக., 31க்குள், ஜி.எஸ்.டி., திட்­டத்­திற்கு மாற­லாம். அத்­த­கை­யோ­ருக்கு, கணக்கு தாக்­கல் தாம­தக் கட்­ட­ணம் ரத்து செய்­யப்­படும். அத்­து­டன், உள்­ளீட்டு வரிப் பயனை பெற­வும் வாய்ப்­புள்­ளது என, ஜி.எஸ்.டி., ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)