பதிவு செய்த நாள்
29 ஜூலை2018
05:25
சிங்கப்பூர்: ‘‘சிங்கப்பூர் கடைபிடிக்கும் வர்த்தக மேம்பாட்டு வழிமுறைகளை இந்தியா பின்பற்றனால், அன்னிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்க்கலாம்,’’ என, சிங்கப்பூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர், டி.சந்துரு தெரிவித்துள்ளார்.அவர், சிங்கப்பூரில், தொழில்முனைவோர் கருத்தரங்கில் மேலும் பேசியதாவது:உலகளவில், சுலபமாக தொழில் துவங்கும் நாடுகளில், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா, 30 இடங்கள் முன்னேறி, 100வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் மேலும் முன்னேற்றம் காண, சிங்கப்பூர் கடைபிடிக்கும் வர்த்தக மேம்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.இந்தியாவைச் சேர்ந்த, 8,000க்கும் அதிகமான நிறுவனங்கள், சிங்கப்பூரில் செயல்பட, இதுதான் காரணம்.சிங்கப்பூரில், ஒரு நிறுவனத்தை பதிவு செய்வதும், வங்கி கணக்கை துவக்கி, தொழில் துவங்குவதும் மிகவும் சுலபம். இது போன்ற வசதிகளை செய்தால், இந்தியாவால் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க முடியும்.சிங்கப்பூர் – இந்தியா இடையே பரஸ்பரம் தொழில் துவக்குவதை ஊக்குவிக்க, இந்திய தொழிலக கூட்டமைப்புடன், பேச்சு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|