பதிவு செய்த நாள்
29 ஜூலை2018
05:26
புதுடில்லி: மத்திய அரசு, ‘கூரியர்’வாயிலான ஏற்றுமதி வரம்பை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.தற்போது, கூரியரில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரம்பு, 25 ஆயிரம் ரூபாயாக உள்ளது.இந்த வரம்பை உயர்த்த வேண்டும் என, ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பினர், மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று, தற்போது கூரியர் ஏற்றுமதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கூரியர் அல்லது அஞ்சல் சேவை மூலம், ஒரு சரக்கில், அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். இந்த வரம்பு, தற்போது, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.ஏற்றுமதியாளர்கள், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், ‘டூட்டி கிரெடிட் ஸ்கிரிப்’ என்ற, வரி வரம்பு சலுகையை பெறுகின்றனர். ஒவ்வொரு பொருட்களுக்கும், அவை ஏற்றுமதியாகும் நாடுகளுக்கும் ஏற்ப, வரம்பு விகிதம் வேறுபடும்.இந்த வகையில், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தில், கூரியர் அல்லது அஞ்சல் மூலம் ஏற்றுமதி செய்வோருக்கும், ஒரு சரக்கிற்கான வரம்பு, 25 ஆயிரத்தில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை வரவேற்று, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூரியரில் ஆபரணங்கள் உட்பட, பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும்’ என, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|