பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:33
மும்பை : ரிசர்வ் வங்கியின், நிதி கொள்கை தொடர்பான மூன்று நாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று துவங்கியது. ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையிலான, ஆறு உறுப்பினர்கள் அடங்கிய இக்கூட்டத்தில், வட்டிவிகிதம் குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளது.
இம்முறை, வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்பது குறித்த நிபுணர்களின் கருத்து, வேறுபட்டு காணப்படுகிறது. நாளைய அறிவிப்பில், வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது என, ஒரு தரப்பினர் கருதுகின்றனர். கடந்த கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம், 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., இம்முறை வட்டிவிகிதத்தை உயர்த்தாது என கருதுவதாக தெரிவித்து உள்ளது. இருப்பினும், டி.பி.எஸ்., உள்ளிட்ட சில நிறுவனங்கள், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என கருத்து தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|