பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:35
புதுடில்லி : இந்தாண்டு, ஜனவரி – ஜூன் வரையிலான அரையாண்டில், 94 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 400 கோடி டாலர் திரட்டியுள்ளன.
இதில், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், புதிய பங்கு வெளியீடு மூலம், 120 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. இதே காலத்தில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், 32 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 9.87 கோடி டாலர் திரட்டியுள்ளன. ஐந்து பெரிய நிறுவனங்கள், மூலதனச் சந்தையில், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 110 கோடி டாலர் திரட்டிக் கொண்டன.
மதிப்பீட்டு காலாண்டில், பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடம் போது, 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டின், முதல் அரையாண்டில், 97 புதிய பங்கு வெளியீடுகளுடன், ஹாங்காங் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில், இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளதாக, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|