பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:40
புதுடில்லி : நாட்டின் மாம்பழ உற்பத்தி, 2017-- – -18 பயிர் பருவத்தில், 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் எனக் கருதுவதாக, விவசாய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாம்பழ உற்பத்தியானது, 2017 ஜூலை முதல், 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில், அதற்கு முந்தையை பருவ ஆண்டை விட, 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2 கோடியே, 10 லட்சம் டன் ஆக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, விவசாயத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் மாம்பழ உற்பத்தி, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அரசானது, உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் விளைவாக, இந்த ஆண்டும், 8 சதவீத அளவுக்கு மாம்பழ உற்பத்தி அதிகரிக்கும் எனக் கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய தகவலின்படி, மாம்பழ உற்பத்தியில் முன்னணியில் இருப்பது, உத்தர பிரதேச மாநிலமாகும். இதையடுத்து, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை, 45.40 லட்சம் டன் உற்பத்தி ஆகியிருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில், 43.40 லட்சம் டன் ஆக இருந்தது.
ஆந்திராவிலிருந்து, 44.80 லட்சம் டன்; கர்நாடகாவிலிருந்து, 17.10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி ஆகியிருக்கும் என, கருதப்படுகிறது. மாம்பழ உற்பத்தி மிக அதிகமாக இருந்த போதிலும், ஏற்றுமதி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் டன் அளவுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|