பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:41
புதுடில்லி : இரண்டு ஆண்டுகளாக, நிதி நிலை அறிக்கை அளிக்காமல், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, 1,313 நிறுவனங்கள், மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.
மத்திய அரசு, சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் போலி நிறுவனங்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு நிறுவனம், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தால், நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக பதிவில் இருந்து நீக்கப்படும். இந்த வகையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
தற்போது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாத, 1,313 நிறுவனங்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில், 736 நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இல்லையா அல்லது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனவா என்பது குறித்து, விசாரிக்கப்படுகிறது. ‘அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கோரி, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும். பதில் வராதபட்சத்தில், அவற்றின் பதிவு நீக்கப்படும்’ என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|