பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:30
புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சந்தை மூலதனத்தில், டி.சி.எஸ்., நிறுவனத்தை விஞ்சி, மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
நேற்று, மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 7 லட்சத்து, 51 ஆயிரத்து, 415 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, டி.சி.எஸ்., நிறுவனத்தின், 7 லட்சத்து, 43 ஆயிரத்து, 222 கோடி ரூபாய், சந்தை மூலதனத்தை விட, 8,193 கோடி ரூபாய் அதிகம்.
நேற்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு, 3.14 சதவீதம் உயர்ந்து, 1,185 ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனம் சிறப்பாக லாபம் ஈட்டியதை அடுத்து, அதன் பங்குகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், சந்தை மூலதனத்தில், டி.சி.எஸ்., நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தை விஞ்சி, முதலிடத்தை பிடித்திருந்தது. டி.சி.எஸ்., நிறுவனத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை, 13ல், 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய இரண்டாவது நிறுவனம் என்ற சிறப்பை, ரிலையன்ஸ் பெற்றது.
சந்தை மூலதனத்தில், எச்.டி.எப்.சி., வங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களை, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி., நிறுவனங்கள் பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|