ஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வுஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வு ... முட்டை விலை    450 காசாக நிர்ணயம் முட்டை விலை 450 காசாக நிர்ணயம் ...
மிதமான வளர்ச்சியில் தயாரிப்பு துறை புதிய, ‘ஆர்டர்’கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
00:06

புதுடில்லி:புதிய, ‘ஆர்­டர்’கள், உற்­பத்தி, வேலை வாய்ப்பு ஆகி­யவை சற்று உயர்ந்­த­தால், கடந்த ஜூலை மாதம், தயா­ரிப்பு துறை, மித­மான வளர்ச்­சியை கண்டி­ருப்­பது, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்ளது.
தயா­ரிப்பு துறை குறித்து, நிக்கி – மார்க்­கிட்நிறுவனம் வெளி­யிட்டுள்ள ஆய்­வ­றிக்கை:நடப்­பாண்­டில், தயாரிப்பு துறை­யின் உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்­தில் தான் அதி­க­மாக இருந்­தது. அத­னால், தயா­ரிப்பு துறை உற்­பத்தி வளர்ச்­சியை குறிக்­கும், ‘என்.ஐ.எம்., --– பி.எம்.ஐ.,’ குறி­யீடு, 53.1 புள்­ளி­யாக உயர்ந்­திருந்­தது.இது, மே மாதம், 51.2 புள்ளி; ஏப்­ர­லில், 51.6 புள்ளி­யாக இருந்­தது.

ஜூலை­யில், தயாரிப்பு துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, மித­மான அள­விற்கே இருந்­தது. புதிய ஆர்­டர்களும், உற்­பத்­தி­யும் ஓர­ளவு அதி­க­ரித்து காணப்­பட்­டது; வேலை வாய்ப்பும் சற்று உயர்ந்­திருந்­தது.எனி­னும், ஜூன் உடன் ஒப்­பி­டும் போது, வளர்ச்சி விகி­தம் சற்று குறைந்­துள்­ளது. அத­னால், தயா­ரிப்பு துறை உற்­பத்தி வளர்ச்­சியை குறிக்­கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறி­யீடு, 52.3 புள்­ளி­யாக உள்­ளது.
இக்­கு­றி­யீடு, 50 புள்­ளி­ களை தாண்­டி­னால், அது வளர்ச்­சியை குறிக்­கும். இதன்­படி, தயா­ரிப்பு துறை, தொடர்ந்து, 12 மாதங்­க­ளாக வளர்ச்சி கண்டு வரு­கிறது.

பணியாளர்கள்
இந்­தாண்­டில், ஜூன் மாதத்­திற்கு பின், ஜூலை­யில் தான், தயா­ரிப்பு துறை வளர்ச்சி விகி­தம், வலி­மை­யாக இருந்­தது.உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­களில், தயா­ரிப்பு பொருட்­க­ளுக்கு அதிக தேவைப்­பாடு காணப்­பட்­டது.ஜூன் முதல், உள்­நாடு மற்­றும் ஏற்­று­மதி ஆர்டர்கள் எண்­ணிக்கை மித­மாக உயர்ந்து வரு­கின்­றன. தொடர்ந்து, ஒன்­ப­தா­வது மாத­மாக, ஜூலை­யி­லும் லேசான வளர்ச்சி காணப்­பட்­டது.
புதிய ஆர்­டர்­கள் அதி­க­ரிப்­பும், உற்­பத்தி உயர்­வும், நிறு­வ­னங்­க­ளுக்கு நம்­பிக்கை அளித்­துள்­ளன. அத­னால், தொடர்ந்து, நான்­கா­வது மாத­மாக, ஜூலை­யில், நிறு­வ­னங்­கள், பணி­யா­ளர் நிய­மனத்தை அதி­க­ரித்­துள்ளன.மூன்று மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, நாட்­டின் வர்த்­தக சூழல் குறித்து, நிறு­வ­னங்­கள்அதிக நம்பிக்கை தெரிவித்துள்­ளன.
எனி­னும், இந்­தாண்டு இறு­தி­யில், மந்­த­நிலை ஏற்­ப­ட­லாம் என, சிலர் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர். அத­னால், வர்த்­த­கச் சூழ­லுக்­கான நம்­பிக்கை குறி­யீடு, சரா­ச­ரிக்­கும் குறை­வா­கவே உள்­ளது.இதற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வள­ரும் நாடு­களில் இருந்து அதி­க­மாக வெளி­யே­றும் முத­லீ­டு­கள்; பணப்­பு­ழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தும், உள்­நாட்டு நிதிக் கொள்கை­கள் ஆகி­யவை கார­ண­மா­கும்.இந்­தாண்டு, பண­வீக்க உயர்­வும், அதை கட்­டுப்­ப­டுத்த, ரிசர்வ் வங்கி எடுக்­கும் நட­வ­டிக்­கை­களும், தயா­ரிப்பு துறைக்குசவா­லாக இருக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்பட்­டுள்­ளது.
மறுமதிப்பீடு
கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், வளர்ந்து வரும் நாடு­களில் இருந்து, வளர்ந்த நாடு­க­ளுக்கு மாறும் முத­லீ­டு­கள், நிதிக் கொள்கை முடி­வு­கள் ஆகி­யவை, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அதன் அடிப்­ப­டை­யில், கடந்த நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் உண்­மை­யானபொரு­ளா­தார வளர்ச்சி, 7.1 சத­வீ­த­மாக குறைத்து மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.
ஆஷ்னா தோதியா
பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)