பதிவு செய்த நாள்
02 ஆக2018
00:06
புதுடில்லி:புதிய, ‘ஆர்டர்’கள், உற்பத்தி, வேலை வாய்ப்பு ஆகியவை சற்று உயர்ந்ததால், கடந்த ஜூலை மாதம், தயாரிப்பு துறை, மிதமான வளர்ச்சியை கண்டிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
தயாரிப்பு துறை குறித்து, நிக்கி – மார்க்கிட்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நடப்பாண்டில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில் தான் அதிகமாக இருந்தது. அதனால், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், ‘என்.ஐ.எம்., --– பி.எம்.ஐ.,’ குறியீடு, 53.1 புள்ளியாக உயர்ந்திருந்தது.இது, மே மாதம், 51.2 புள்ளி; ஏப்ரலில், 51.6 புள்ளியாக இருந்தது.
ஜூலையில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, மிதமான அளவிற்கே இருந்தது. புதிய ஆர்டர்களும், உற்பத்தியும் ஓரளவு அதிகரித்து காணப்பட்டது; வேலை வாய்ப்பும் சற்று உயர்ந்திருந்தது.எனினும், ஜூன் உடன் ஒப்பிடும் போது, வளர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது. அதனால், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 52.3 புள்ளியாக உள்ளது.
இக்குறியீடு, 50 புள்ளி களை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 12 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.
பணியாளர்கள்
இந்தாண்டில், ஜூன் மாதத்திற்கு பின், ஜூலையில் தான், தயாரிப்பு துறை வளர்ச்சி விகிதம், வலிமையாக இருந்தது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், தயாரிப்பு பொருட்களுக்கு அதிக தேவைப்பாடு காணப்பட்டது.ஜூன் முதல், உள்நாடு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் எண்ணிக்கை மிதமாக உயர்ந்து வருகின்றன. தொடர்ந்து, ஒன்பதாவது மாதமாக, ஜூலையிலும் லேசான வளர்ச்சி காணப்பட்டது.
புதிய ஆர்டர்கள் அதிகரிப்பும், உற்பத்தி உயர்வும், நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன. அதனால், தொடர்ந்து, நான்காவது மாதமாக, ஜூலையில், நிறுவனங்கள், பணியாளர் நியமனத்தை அதிகரித்துள்ளன.மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, நாட்டின் வர்த்தக சூழல் குறித்து, நிறுவனங்கள்அதிக நம்பிக்கை தெரிவித்துள்ளன.
எனினும், இந்தாண்டு இறுதியில், மந்தநிலை ஏற்படலாம் என, சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். அதனால், வர்த்தகச் சூழலுக்கான நம்பிக்கை குறியீடு, சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.இதற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வளரும் நாடுகளில் இருந்து அதிகமாக வெளியேறும் முதலீடுகள்; பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும், உள்நாட்டு நிதிக் கொள்கைகள் ஆகியவை காரணமாகும்.இந்தாண்டு, பணவீக்க உயர்வும், அதை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளும், தயாரிப்பு துறைக்குசவாலாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு
கச்சா எண்ணெய் விலையேற்றம், வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து, வளர்ந்த நாடுகளுக்கு மாறும் முதலீடுகள், நிதிக் கொள்கை முடிவுகள் ஆகியவை, பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன் அடிப்படையில், கடந்த நிதியாண்டில், இந்தியாவின் உண்மையானபொருளாதார வளர்ச்சி, 7.1 சதவீதமாக குறைத்து மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஆஷ்னா தோதியா
பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|