பதிவு செய்த நாள்
03 ஆக2018
00:15
திருப்பூர்:இந்தோ – பசிபிக் நாடுகள் வர்த்தக கூட்டமைப்புக்கு, திருப்பூர் ஜவுளி துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வர்த்தக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, நாடுகள் ஒருங்கிணைந்து, தங்களுக்குள் கூட்டமைப்பையும், ஒப்பந்தங்களையும் மேற்கொள்கின்றன. 12 நாடுகள் இணைந்து, டிரான்ஸ் பசிபிக் நாடுகள் கூட்ட மைப்பை உருவாக்கின.இந்தியா மற்றும் பசிபிக் கடல் பகுதி நாடுகள் இணைந்து, இந்தோ – பசிபிக் வர்த்தக கூட்டமைப்பை உருவாக்கி வருகின்றன. 2013ல் துவங்கி, பேச்சு நடந்து வந்த நிலையில், விரைவில் இந்த கூட்டமைப்பு உருவாக உள்ளது.
எளிதாகும்
இந்தோ –- பசிபிக் வர்த்தக கூட்டமைப்பில், அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.இந்த கூட்டமைப்பில், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஜப்பான், நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.கூட்டமைப்பு உருவாகும்போது, அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எளிதாகும்.
நம் நாட்டின் ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா பாரம்பரிய சந்தையாக உள்ளது. வர்த்தக கூட்டமைப்பு உருவானால், அந்த நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியை, எளிதாக அதிகரிக்க முடியும் என, திருப்பூர் பின்னலாடை துறையினர் கருதுகின்றனர்.
முதலீடு
பின்னலாடை துறை ஆலோசகர் கிரீஷ் கூறியதாவது:இந்த கூட்டமைப்பால், நம் நாட்டில் பல்வேறு வகை தொழில் துறைகள், வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, போதிய நிதி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன; வங்கி கடன்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இந்த கூட்டமைப்பு உருவாகும் போது, பிற நாடுகளில் இருந்து, நம் ஜவுளி நிறுவனங்களுக்கு தேவையான முதலீடு கிடைக்கும்; தொழில்நுட்பங்களை எளிதாக பெற முடியும். இறக்குமதி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|