பதிவு செய்த நாள்
03 ஆக2018
00:20
கரூர்:ஆடைகள் தைக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், தீபாவளி பண்டிகையின் போது, புத்தாடைகள் தைப்பதற்கான கூலி கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சட்டை தைக்க பயன்படுத்தப்படும் கேன்வாஸ், 25 மீ., விலை, 70 ரூபாயில் இருந்து, 90 ரூபாய்; பேன்ட்டுக்கு பயன்படுத்தப்படும் ஜிப், ஐந்து ரூபாயில் இருந்து, ஏழு ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும், சர்ட் காலர், ஐந்து ரூபாயில் இருந்து, எட்டு ரூபாய்; சர்ட் பட்டன், நிறத்தைப் பொறுத்து, 10 டஜனுக்கு, 20 – 25 ரூபாய் வரை, என, தையல் மூலப் பொருட்கள் அனைத்தும் தற்போது விலை உயர்ந்துவிட்டன.
இதனால், தீபாவளி பண்டிகையின் போது, ஆடைகள் தைப்பதற்கான கூலி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் பகுதி தையல் தொழிலாளர்கள் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளாக, ரெடிமேட் ஆடைகள் மீது, மக்களுக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், துணிகளை வாங்கி, தையல் கடைகளில் கொடுத்து தைப்பது படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், நடப்பாண்டில், சர்ட், பேன்ட் தைக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் தைப்பதற்கான கூலி, சற்று உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|