பதிவு செய்த நாள்
04 ஆக2018
00:14
அன்னுார்:பஞ்சு விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், கோவை புறநகரில், பல ஸ்பின்னிங் மில்கள், ஷிப்டுகளை குறைத்துள்ளன.கோவை புறநகர் பகுதியான அன்னுார், கோவில்பாளையம், சரவணம்பட்டியில், 3,000 ஸ்பிண்டில் முதல், 50 ஆயிரம் ஸ்பிண்டில் திறன் வரை உள்ள, 300 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இவற்றுக்கு, தமிழகத்திலிருந்து மிக குறைந்த அளவு பஞ்சு தான் வருகிறது. பெரும்பாலும், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்கின்றனர்.
இங்கு பெரும்பாலும்,40ம் எண் மற்றும் 60ம் எண் நுால் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, அவினாசி, திருப்பூர், சோமனுார், ஈரோடு மற்றும் மஹாராஷ்டிராவுக்கு அனுப்பப்படுகிறது.இந்த மில்களில், வெளிமாவட்டம் மற்றும் ஒடிசா, பீஹார், ஆந்திராவைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சில மாதங்களாக பஞ்சு விலை சிறிது சிறிதாக உயர்ந்து வந்தது.
இப்போது, ஒரு கண்டி – 355.6 கிலோ விலை, 53 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. எட்டு மாதத்தில், ஒரு கண்டிக்கு, 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால், நுால் விலை ஏறவில்லை. இதனால், ஸ்பின்னிங் மில்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது:பஞ்சு வரத்து குறைந்து, விலை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், தொழிலாளர் சம்பளம், வங்கி வட்டி என கணக்கு பார்த்தால், 50 கிலோ மூட்டைக்கு, 1,500 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், ஷிப்டுகளை குறைத்துள்ளோம். விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதிக வேலைவாய்ப்பு தரும் ஜவுளி தொழிலை காப்பாற்ற, மத்திய அரசு, உடனே பஞ்சு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|