பதிவு செய்த நாள்
04 ஆக2018
00:30
சான்பிரான்சிஸ்கோ:அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் சந்தை மூலதனம், 1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது.
ஆக., 2ல், அமெரிக்க பங்குச் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 5.89 டாலர் அதிகரித்து, 207 டாலராக உயர்ந்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மூலதனம், 1 லட்சம் கோடி டாலரை தாண்டியது. இதன் மூலம், இச்சாதனை புரிந்த முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சிறப்பை, ஆப்பிள் பெற்றுள்ளது.
சந்தை மூலதனத்தில், முதலிடம் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த நான்கு இடங்களை, அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் ஆகியவை பிடித்துள்ளன. இந்த தொழில்நுட்ப நிறுவனங்களை, ஐபோன் சாதனங்களை தயாரிக்கும், ஆப்பிள் விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், இரு நண்பர்களுடன் இணைந்து, 1976ல், சிறிய கிடங்கு அறையில், ஆப்பிள் கம்ப்யூட்டரை தயாரிக்க துவங்கினார்.
இன்று, ‘ஐமேக், ஐபோட்’ என, பலவித பரிமாணங்களை கடந்து, ‘ஐபோன்’ ஆக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த, 1997ல், ஆப்பிள் பங்கின் விலை, 1 டாலருக்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|