தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சேவைகள் துறை  22 மாதங்களில் காணாத வளர்ச்சிதொடர்ந்து முன்னேற்ற பாதையில் சேவைகள் துறை 22 மாதங்களில் காணாத வளர்ச்சி ... சரக்கு – சேவை வரிகளை மூன்றாக குறைக்க பரிசீலனை சரக்கு – சேவை வரிகளை மூன்றாக குறைக்க பரிசீலனை ...
அமெரிக்க பொருட்களுக்கு வரி உயர்வு தள்ளிவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2018
00:37

புதுடில்லி:அமெ­ரிக்­கா­வின், 29 பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட கூடு­தல் வரி, அம­லுக்கு வரு­வது தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப், உருக்கு மற்­றும் அலு­மி­னி­யம் இறக்­கு­ம­திக்கு, முறையே, 25 மற்றும் 10 சத­வீ­தம் வரி விதித்­துள்­ளார்.இத­னால், அவற்­றின் ஏற்­று­ம­தி­யில், இந்­தி­யா­வுக்கு, கூடு­த­லாக, 1,600 கோடி ரூபாய் வரிச் சுமை ஏற்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புகார்

இது குறித்து, உலக வர்த்தக அமைப்­பி­டம் இந்தியா புகார் செய்­து உள்­ளது.மேலும், அமெ­ரிக்­கா­ விற்கு பதி­லடி கொடுக்­கும் வகை­யில், அங்­கி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும் ஆப்­பிள், பாதாம், பருப்பு உள்ளிட்ட, 29 பொருட்­க­ளுக்கு வரியைஉயர்த்­தியது.இதன்­படி, அமெ­ரிக்க வால்­நட் இறக்­கு­ம­திக்கு, 30 சத­வீத வரி, 120 சதவீதமாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. பட்­டாணி, கொண்டைக்­கடலை, மசூர் பருப்­புக்கு, சுங்க வரி, 30 சத­வீ­தத்­தில் இருந்து, 70 சத­வீ­த­மாக நிர்ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

தள்ளி வைப்பு

பயறு வகை­க­ளுக்கு, 30 சத­வீத வரி, 40 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­லை­யில், நேற்று அம­லுக்கு வரு­வ­தாக இருந்த புதிய வரி, செப்., 18க்கு தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய நிதி அமைச்­ச­கம் தெரி­வித்­து உள்­ளது.இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறிய­தா­வது:

அமெ­ரிக்கா – இந்­தியா இடையே, இரு தரப்­பி­லும் உயர்த்­தப்­பட்ட இறக்­கு­மதி வரியை குறைப்­பது குறித்து, பேச்சு நடை­பெற்று வரு­கிறது. இதில், பரஸ்­ப­ர சாத­க­மான முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.அத­னால், அமெ­ரிக்­கா­வின், 29 பொருட்­க­ளுக்­கான புதிய வரி அம­லுக்கு வரு­வது, 45 நாட்­க­ளுக்கு தள்ளி வைக்­கப்­பட்­டு உள்ளது. பரஸ்­பர பேச்­சில், சுமுக உடன்­பாடு ஏற்­ப­டும்­பட்­சத்­தில், வரி விதிப்பு மாறக்­கூ­டும்.இவ்­வாறு அவர் கூறினார்.
பாதிப்பு

இந்­தியா, அமெ­ரிக்­கா­வுக்கு ஆண்­டுக்கு, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள, உருக்குமற்­றும் அலு­மி­னி­யம் பொருட்­களை ஏற்­று­மதி செய்­கிறது.அவற்­றுக்­கான வரியை, அமெ­ரிக்கா உயர்த்­தி­யுள்­ள­தால், இந்­தியா, கூடு­த­லாக, 1,614 கோடி ரூபாய் இழப்பை சந்­திக்க நேரும்.இதில், உருக்கு மற்­றும் அலு­மி­னிய பொருட்­களின் பங்கு முறையே, 1,330 கோடி மற்­றும் 284 கோடி ரூபா­யாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இந்த இழப்பை ஈடு செய்ய, வரி உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)