பதிவு செய்த நாள்
05 ஆக2018
00:40
கோல்கட்டா:‘‘மத்திய அரசு, 'ஜி.எஸ்.டி.,' என, சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளை, மூன்றாக குறைக்க திட்டமிட்டுள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சகத்தின், முதன்மை பொருளாதார ஆலோசகர், சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.
அவர், கோல்கட்டாவில், பாரத் வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:தற்போது, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு விதமான, ஜி.எஸ்.டி., உள்ளது. இத்துடன், பல பொருட்களுக்கு, பூஜ்ய வரி விதிப்பும் உள்ளது.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி., நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, தற்போதுள்ள நான்கு வகை வரிகளை, மூன்றாக குறைப்பது குறித்தும்பரிசீலிக்கப்படுகிறது.
இதன்படி, 12 மற்றும் 18 சதவீத வரிகளை ஒன்றிணைத்து, 15 சதவீதம் என, ஒரே வரியாக நிர்ணயிக்கப்படலாம். இந்த வரி விதிப்பின் கீழ், பெரும்பான்மையான பொருட்கள் கொண்டு வரப்படும்.இதனால், ஜி.எஸ்.டி., வரி வசூல், கணக்கு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகள் மேலும் சுலபமாகும். இத்துடன், ஜி.எஸ்.டி., நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|